ஆப்நகரம்

ஜெர்மனி செல்லும் ‘ஐம்பொன்’ திருவள்ளுவர்

ஜெர்மனி அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட உள்ள திருவள்ளுவர் சிலைகள் சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Samayam Tamil 2 Nov 2019, 12:24 pm
ஜெர்மனியில் அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட உள்ள, ஐம்பொன்னால் ஆன இரண்டு திருவள்ளுவர் சிலைகள் சென்னையில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டன.
Samayam Tamil Untitled collage (8)


தாய்லாந்தில் இன்று திருக்குறள் புத்தகம் வெளியிடுகிறார் மோடி!!

தமிழ் மொழியின் பெருமை குறித்து உலகின் பிற பகுதிகளில் பேசப்படும்போதெல்லாம் மறக்காமல் நினைவுகூரப்படுவது திருக்குறளும் அதை எழுதிய திருவள்ளுவரும்தான். பைபிளுக்கு அடுத்தபடியாக உலகம் முழுவதும் அதிக அளவிலான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

கீழடியில் அருங்காட்சியகம்: சுற்றுலாத் துறையும் தீவிரம்!

பிரதமர் மோடி பல இடங்களில் திருக்குறள் பற்றி தனது பேச்சில் குறிப்பிட்டுவருகிறார். இன்று தாய்லாந்து சென்றுள்ள அவர் தாய்லாந்து மொழியில் திருக்குறள் நூலை வெளியிடுகிறார்.

ஜெர்மனியில் பாடன் உர்ட்டன்பெர்க் மாநிலத்தில் ஸ்டுட்கார்ட் நகரத்தில் லின்டன் அரசு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் ஐம்பொன்னால் உருவாக்கப்பட்ட இரண்டு திருவள்ளுவர் சிலைகள் வரும் டிசம்பர் 4ஆம் தேதி வைக்கப்பட உள்ளன.

திருவள்ளுவரின் பெருமைகளை உலகம் முழுவதும் பரப்பும் நோக்குடன், தமிழ் மரபு அறக்கட்டளை என்ற பன்னாட்டு அமைப்பு இந்த ஐம்பொன் சிலைகளை வழங்குகிறது. இந்த சிலைகளை அனுப்பிவைக்கும் நிகழ்வு சென்னை தலைமைச் செயலகத்தில் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் முன்னிலையில் நேற்று (நவம்பர் 1) நடைபெற்றது.

அடுத்த செய்தி