ஆப்நகரம்

முதல்வருக்கு மாடுகளைப் பரிசளித்த அமைச்சர்

காவிரி நதிநீர் மீட்பு வெற்றி விழாவில் ஏர்கலப்பை மற்றும் 2 மாடுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பரிசளித்தார்.

Samayam Tamil 19 Jun 2018, 3:33 am
காவிரி நதிநீர் மீட்பு வெற்றி விழாவில் ஏர்கலப்பை மற்றும் 2 மாடுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பரிசளித்தார்.
Samayam Tamil Df-1YZMVMAE49H5


நாகையில் உள்ள மயிலாடுதுறையில் காவிரி நதிநீர் மீட்பு வெற்றி விழா இன்று நடந்தது. இதில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "தி.மு.க.வுடன் சேர்ந்து கொண்டு சில விஷமிகள் அ.தி.மு.க.வை அழிக்க நினைக்கின்றனர். எத்தனை சதிகள் செய்தாலும், சதிகாரர்களுடன் சேர்ந்து செயல்பட்டாலும் அ.தி.மு.க.வை ஒன்றும் செய்ய முடியாது." என்றார்.

மேலும், என்னைப்போல் ஆயிரம் பழனிசாமி அதிமுகவில் உருவாக முடியும் என்றார். இந்த விழாவின் போது மேடையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ஓ.எஸ். மணியன் ஏர்க்கலப்பை மற்றும் ஒரு ஜோடி மாடுகளை பரிசாக அளித்தார்.

அடுத்த செய்தி