ஆப்நகரம்

நிவர் புயல்... உயிர் சேதம் எவ்வளவு? -புள்ளிவிவரங்களுடன் சொல்லும் அமைச்சர்!

நிவர் புயலால் மாநில அளவில் ஏற்பட்டுள்ள உயிர் சேதம், குடியிருப்புகள் சேதம் எவ்வளவு என்பது குறித்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் புள்ளிவிவரங்களை கூறியுள்ளார்.

Samayam Tamil 26 Nov 2020, 4:06 pm
மாநில பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னை எழிலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நிவர் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து அவர் கூறியது:
Samayam Tamil அமைச்சர் உதயகுமார்
நிவர் புயல் பாதிப்புகள் குறித்து விவரிக்கும் அமைச்சர் உதயகுமார்


தமிழகத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்கூட்டியே திட்டமிட்டு எடுத்ததால் மிக பெரிய பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த புயலை பொறுத்தவரை தற்போது வரை எந்த ஒரு மீனவர்களுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தமிழகத்தில் நிவர் புயல் பாதிப்பு காரணமாக மூன்று பேர் உயிரிழள்ளனர்.

தமிழகத்தில் தற்போது வரை 3,085 சிறப்பு முகாமில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 317 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயல் காரணமாக 101 வீடுகள சேதமடைந்துள்ளன; 26 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

புயல் பாதிப்பு... சைதையில் ஸ்டாலின் நேரில் ஆய்வு!

சேதமடைந்த பயிர்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்க மாவட்ட வாரியாக பணிகள் துவங்கி உள்ளன. கணக்கெடுப்பு எடுத்து முடித்த பின்பு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிவாரணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார்.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் வெளியேற்றப்படுவதால் மக்கள் அச்சத்தில் இருந்தனர். ஆனால் முதல்வர் நேரடியாக களத்திற்கு சென்றதால் மக்கள் அச்சத்தில் இருந்து மீண்டுள்ளனர்.

கடலூரில் முதல்வர் பழனிசாமி ஆய்வு!

புயல் பாதிப்புகளை முதலமைச்சர் ஆய்வு செய்வதை பார்த்து, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும் கள ஆய்வு மேற்கொள்கிறார். எதிர்க்கட்சி தலைவரை நாங்கள் தான் இயக்கி வருகிறோம். எங்கள் இயக்கத்தை பார்த்துதான் அவர் இயங்கிக் கொண்டிருக்கிறார் என்று அமைச்சர் உதயகுமார் கூறினார்.

அடுத்த செய்தி