ஆப்நகரம்

ஆவின் பாலகங்கள் எங்கு, எப்படி தொடங்குவது? சட்டமன்றத்தில் விளக்கிய பால்வளத்துறை அமைச்சர்!

தமிழகத்தில் ஆவின் பாலகங்கள் எப்படி திறப்பது என்பது குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

Samayam Tamil 17 Jul 2019, 2:05 pm
தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய கேள்வி நேரத்தின் போது ஒரத்தநாடு எம்.எல்.ஏ ராமசந்திரன் பேசினார். அப்போது, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆவின் பாலகங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன.
Samayam Tamil Rajendra Balaji


இதற்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டு வருகிறது? என்னென்ன நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கம் அளித்தார்.

அதாவது, பால்வளத்துறைக்கு சொந்தமான இடங்கள், அரசின் பிற துறைகள் மற்றும் தனியாருக்கு சொந்தமான இடங்களில் ஆவின் பாலகங்கள் தொடங்கலாம். இதற்கு 100 சதுர அடி இடமாவது இருக்க வேண்டும்.

Also Read: ஆத்தூரை தலைமை இடமாகக் கொண்டு புதிய சுகாதார மாவட்டம் - முதல்வர் பழனிசாமி!

அது 10 ஆண்டுகளுக்கு சொந்தமாகவோ அல்லது குத்தகைக்கு எடுத்தோ வைத்திருக்க வேண்டும். இந்த ஆவணங்களை மாவட்ட ஆவின் மேலாளருக்கு அனுப்ப வேண்டும். இதனை சம்பந்தப்பட்ட அலுவலர் பரிசீலிக்க வேண்டும்.

Also Read: இனியாவது உள்ளாட்சி தேர்தல் நடக்குமா? தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி!

எந்தவித வில்லங்கமும் இல்லையெனில் அனுமதி வழங்கப்படும். இதில் ஜாதி, மத பேதம் பார்ப்பதில்லை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

Also Read: மறைக்கவில்லை, தகவல் வரவில்லை; நீட் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் அமைச்சர் சிவி சண்முகம் பதில்!

அடுத்த செய்தி