ஆப்நகரம்

Sekar Babu சிதம்பரம் கோவிலில் அநியாயம் நடக்கிறது: அமைச்சர் சேகர் பாபு

சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலில் அநியாயம், அக்கிரமம் நடைபெற்று வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 7 Jul 2022, 11:54 am
சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் இரட்டை மலை சீனிவாசன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், சேகர்பாபு உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Samayam Tamil sekar babu


இந்நிகழ்வில் சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பாலாஜி, பிரபாகர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சாமிநாதன், “சுதந்திர போராட்ட தியாகி, தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதி இரட்டைமலை சீனிவாசன் சிலைக்கு முதலமைச்சர் ஆணைக்கிணங்க மரியாதை செலுத்தினோம். இரட்டைமலை சீனிவாசன், அம்பேத்கருடன் நெருங்கி பழகி அவரோடு வட்டமேசை மாநாட்டில் பங்கேற்றவர். இரட்டைமலை சீனிவாசனுக்கு மணிமண்டபம் அமைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்” என கூறினார்.

அதிமுகவில் யாருக்கு என்ன பதவி? ஓபிஎஸ் டீம் இனி ஒட்ட வாய்ப்பில்லையா?

பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசினார். சிதம்பரம் நடராஜர் கோவிலில் புதுச்சேரி ஆளுநர் அவமதிக்கப்பட்டது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, “சிதம்பரம் நடராஜர் கோயில் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் ஊடகங்கள் செய்தியை கொண்டு செல்ல வேண்டும். சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலில் அநியாயம், அக்கிரமம் நடைபெற்று வருகிறது. புகார்கள் தொடர்ந்து வருகிறது தமிழக அரசு ஒவ்வொரு அடியும் பார்த்து பார்த்து வைக்கும் நிலை உள்ளது. சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி நல்ல முடிவை எடுப்போம்” என தெரிவித்தார்.

அடுத்த செய்தி