ஆப்நகரம்

குருமூர்த்திக்கு நாவடக்கம் வேண்டும் : அமைச்சர் செல்லூர் ராஜூ

துக்ளக் வார இதழின் ஆசிரியர் குருமூர்த்தி கருத்தை அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

TNN 27 Dec 2017, 1:42 pm
துக்ளக் வார இதழின் ஆசிரியர் குருமூர்த்தி கருத்தை அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
Samayam Tamil minister sellur k raju criticize thuglak editor gurumurthy
குருமூர்த்திக்கு நாவடக்கம் வேண்டும் : அமைச்சர் செல்லூர் ராஜூ


அ.தி.மு.க.,வில் இருந்து, தினகரன் ஆதரவாளர்களின் பதவிகள் பறிக்கப்பட்டன. 'ஆறு மாதங்களை தாண்டிய பின், வலுவில்லாதவர்கள் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். இவர்கள் சரியான திறமையற்ற தலைவர்கள்' என, 'துக்ளக்' ஆசிரியரும், அரசியல் விமர்சகருமான, குருமூர்த்தி, டுவிட்டரில் கருத்தை பதிவு செய்தார் .

இந்த பதிவு அதிக பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பதிவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வைகையில் அமைச்சர் ஜெயகுமார் பதிலுக்கு அவரை விமர்சித்தார். இதற்கு குருமூர்த்தி ’ தான் கூறியதை தவறாக புரிந்துகொண்டால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது என்று கூறினார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார் ’ சோ போன்ற மகத்தானவர்கள் பணியாற்றிய இடத்தில் இருக்கும் குருமூர்த்தி நாவாடக்கத்தோடு பேசியிருக்க வேண்டும் . அதிமுக அமைச்சர்களை பற்றி பேசுவதற்கு அவருக்கு என்ன அருகதை இருக்கிறது. அவர் நாவடக்கத்தோடு நடந்துகொண்டால் நல்லது அவருக்குத்தான் . அழகிரியின் கருத்தை பற்றி முக.ஸ்டாலின்தான் பதில் அளிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

அடுத்த செய்தி