ஆப்நகரம்

தன் மகளுக்கு மறுமணம் செய்து வைத்த ரஜினி, பெரியாரை மறக்கலாமா? - செல்லூர் ராஜு கேள்வி

ரஜினி தனது இரண்டாவது மகளுக்கு எப்படி இரண்டாவது திருமணம் செய்து வைத்தார். பெரியார் தான் அதற்கு காரணம் என்பதை மறக்க கூடாது.

Samayam Tamil 23 Jan 2020, 3:33 pm
ரஜினி துக்ளக் விழாவில் பேசிய பேச்சுக்குப் பிறகு தேவையில்லாத பேசுபொருளாக மாறியிருக்கிறது சேலம் மாநாடும், ராமர் சீதை சிலை சர்ச்சையும்.
Samayam Tamil sellur-raju-rajini


நடப்புக் காலத்தில் பேசப்பட வேண்டிய பிரச்சினையான 5,8 ஆம் வகுப்பு குழந்தைகளுக்கான பொதுத்தேர்வு, பொதுப்பட்டியலுக்குப் போகும் சுகாதாரத்துறை ஆகியவற்றையும் தாண்டி பேசப்பட்டு வருகிறது பெரியார் குறித்து ரஜினி பேசிய செய்தி.

இந்நிலையில், ரஜினியின் கருத்தை அதிமுக தற்போது வலுவாக எதிர்க்கத் தொடங்கியுள்ளது. ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரின் விமர்சனங்களைத் தொடர்ந்து தற்போது கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவும் விமர்சனம் செய்துள்ளார்.

ரஜினி தனது இரண்டாவது மகளுக்கு எப்படி இரண்டாவது திருமணம் செய்து வைத்தார். பெரியார் தான் அதற்கு காரணம் என்பதை அவர் மறக்க கூடாது என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்

துக்ளக் பிரச்சனை

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இன்று பெண்கள் ஊராட்சித் தலைவர்களாக அமர்ந்திருக்கிறீர்கள் என்றால் அதற்கு காரணம் பெரியார். பெரியாரை பெண் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மறக்க கூடாது.

ராஜீவ்காந்தியை கிராமத்தில் இருப்பவர்கள் மறக்க கூடாது. கிராம ராஜ்யம் கொண்டு வந்தவர் ராஜீவ்காந்தி தான். இந்த நாட்டுக்காக சேவையாற்றியவர்களில் கருணாநிதிக்கும் பங்கு உண்டு. அதை என்னால் மறுக்க முடியாது என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜு, “ரஜினி தனது இரண்டாவது மகளுக்கு எப்படி இரண்டாவது திருமணம் செய்து வைத்தார். பெரியார் தான் அதற்கு காரணம் என்பதை மறக்க கூடாது. பொறுமையாக பேசும் ரஜினியை யாரோ தவறாக வழிநடத்துகிறார்கள்”என கூறியுள்ளார்.

'துக்ளக்' மட்டும் படிச்சிட்டு பேச வேண்டாம் மிஸ்டர் ரஜினி : திருமாவளவன் காட்டம்!!

இதற்கு முன்பு ( 2017ஆம் ஆண்டு ) தானும் ஒரு ரஜினி ரசிகன்தான் ஆனால் ஸ்டாலின் சிறந்த நிர்வாகி என்று ரஜினி பேசுவதை ஏற்கமுடியாது. அவர் (ரஜினி) ஒரு வியாபாரி என்று விமர்சித்துள்ளார் செல்லூர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி