ஆப்நகரம்

மருத்துவமனையில் ஜெயலலிதாவைப் பார்த்தோம்- செல்லூர் ராஜு

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவரை, அமைச்சர்கள் அனைவரும் அவரைப் பார்த்ததாகத் தெரிவித்துள்ளார்.

TNN 26 Sep 2017, 11:09 am
சென்னை: ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவரை, அமைச்சர்கள் அனைவரும் அவரைப் பார்த்ததாகத் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil minister sellur raju has said that he along with all other ministers met jayalalitha
மருத்துவமனையில் ஜெயலலிதாவைப் பார்த்தோம்- செல்லூர் ராஜு


கடந்த வாரம் நடந்தப் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மருத்துவமனையில் ஜெயலலிதாவை யாரும் பார்க்கவில்லை எனவும், இட்லி சாப்பிடதாகச் சொன்னதெல்லாம் பொய் எனவும் தெரிவித்து, அதற்காக மன்னிப்பு கேட்டார். அவரது இந்தப் பேச்சு சர்ச்சையைக் கிளப்பியது.

இந்நிலையில், கீழ்பாக்கம் மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்த கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் இதைப் பற்றி கேட்டபோது, ‘ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது நான் உட்பட அனைத்து அமைச்சர்களும் அவரைச் சந்தித்தோம்’, என்று முரணான கருத்தைத் தெரிவித்துள்ளார்.

அதிமுக அமைச்சர்களின் இந்த முன்னுக்குப் பின் முரணான கருத்துகளால் ஜெயலலிதா மரணம் குறித்த சந்தேகம் மேலும் அதிகரித்துள்ளது.

Minister Sellur.Raju has said that, ‘he along with all other ministers met Jayalalitha at the hospital’.

அடுத்த செய்தி