ஆப்நகரம்

நீர் ஆவியாகாமல் தடுக்க தெர்மோகோல் பயன்படுத்திய அமைச்சர்! கைகொட்டி சிரித்த பொதுமக்கள்!!

நீர் ஆவியாகாமல் தடுக்க தெர்மோகோல் பயன்படுத்திய அமைச்சர்! கைகொட்டி சிரித்த பொதுமக்கள்!!

TOI Contributor 22 Apr 2017, 11:32 am
மதுரை : வைகை அணையில் நீர் ஆவியாகாமல் தடுக்க கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெர்மோகோல்களை (Thermocol) பயன்படுத்தியது பொதுமக்களிடையே சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil minister sellur raju planned to stop water evaporation in vaigai dam by using thermocol
நீர் ஆவியாகாமல் தடுக்க தெர்மோகோல் பயன்படுத்திய அமைச்சர்! கைகொட்டி சிரித்த பொதுமக்கள்!!


தற்போது வைகை அணையில் உள்ள நீர் இன்னும் 10 நாட்களுக்கு மட்டுமே பொதுமக்களுக்கு போதுமானதாக இருக்கும். மேலும் கடும் வெய்யில் காரணமாக நீர் வேகமாக ஆவியாகிவருகிறது. எனவே நீர் ஆவியாவதை தடுக்க கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஆகியோர் வைகை அணைக்கு சென்றனர். 10 ச.கி.மீ அளவுள்ள வைகை அணையை 300 தெர்மோகோல்களை கொண்டு மூடி நீர் ஆவியாவதை தடுக்க முயற்சி மேற்கொண்டனர்.

ஆனால் தெர்மோகோல்களை நீரின் மீது போர்த்திய அடுத்த நொடியே காற்றின் காரணமாக தெர்மோகோல்கள் அனைத்தும் கரை ஒதுங்கியது. இதற்காக 10 லட்ச ரூபாய் செலவானதாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். பரிசல் மூலமும் நீரின் மீது தெர்மோகோல்கள் போடப்பட்டன. ஆனால் பரிசல் கரைக்கு வருவதற்குள் தெர்மோகோல் கரை ஒதுங்கியது. இதனைக்கண்ட உள்ளூர் மக்கள் கைகொட்டி சிரித்தனர். இந்த ஐடியாவை அமைச்சர் செல்லூர் ராஜூ தான் கொடுத்தார் என்று தேனி மாவட்ட ஆட்சியர் கூறியிருக்கிறார். நீர் ஆவியாவதை தடுக்கும் அமைச்சரின் முயற்சி படுதோல்வி அடைந்து பொதுமக்களை சிரிக்க வைத்துள்ளது.

அடுத்த செய்தி