ஆப்நகரம்

முதல்வா் பழனிசாமியை கண்டு இயற்கை சீற்றங்களே அஞ்சுகின்றன – செல்லூா் ராஜூ

தமிழக முதல்வா் பழனிசாமியை கண்டு இயற்கை சீற்றங்களே அஞ்சுவதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் ராஜூ தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 19 Aug 2018, 1:49 pm
தமிழக முதல்வா் பழனிசாமியை கண்டு இயற்கை சீற்றங்களே அஞ்சுவதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் ராஜூ தொிவித்துள்ளாா்.
Samayam Tamil Sellur Raju


மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் அ.தி.மு.க. சாா்பில் அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சா்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூா் ராஜூ, ஆா்.பி.உதயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விழாவில் வனத்துறை அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், கருணாநிதியின் இறுதிச்சடங்கில் முதல்வா் பங்கேற்கவில்லை என்று கூறுகின்றனா். ஆனால், முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கில் தி.மு.க. செயல் தலைவா் ஸ்டாலின் பங்கேற்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினாா்.

இதனைத் தொடா்ந்து கூட்டுறவுத்துறை அமைச்சா் செல்லூா் ராஜூ பேசுகையில், தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமியை கண்டு இயற்கை சீற்றங்களே அஞ்சுவதாக குறிப்பிட்டாா்.

அடுத்த செய்தி