ஆப்நகரம்

திமுக ஆட்சியா? வன்முறை வெடிக்கும்; வேண்டாம் மக்களே; எச்சரிக்கும் தெர்மாகோல் அமைச்சர்!

திமுக ஆட்சிக்கு வந்தால், மிகப்பெரிய அளவில் வன்முறை வெடிக்கும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

TNN 12 Nov 2017, 2:25 pm
மதுரை: திமுக ஆட்சிக்கு வந்தால், மிகப்பெரிய அளவில் வன்முறை வெடிக்கும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
Samayam Tamil minister sellur raju warns about dmk ruling in tamilnadu
திமுக ஆட்சியா? வன்முறை வெடிக்கும்; வேண்டாம் மக்களே; எச்சரிக்கும் தெர்மாகோல் அமைச்சர்!


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர், தமிழக அமைச்சர்கள் தங்கள் கருத்துக்களை சுயமாக வெளியிட்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகளை சரமாரியாக விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் மதுரையில் தெர்மாகோல் புகழ் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அதிமுகவின் நேரடி எதிரி திமுக தான். அது யாருடன் கூட்டணி வைத்தாலும், அவர்களும் எதிரிகளாகத் தான் இருப்பர்.

ஜெயலலிதா ஆட்சியில் தவறு செய்யும் அமைச்சர்கள் தண்டிக்கப்பட்டனர். அதே சூழல் தான் தற்போதும் உள்ளது. இத்தகைய நல்லாட்சிக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.

ஒருவேளை திமுகவிற்கு மக்கள் ஆதரவளித்தால், மிகப்பெரிய வன்முறை சூழலை தமிழகத்தில் உண்டாக்கி விடும். என்னுடைய தலைமையில் கூட்டுறவுத் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

7 ஆண்டுகள் தொடர்ந்து சேவையாற்றி வருவதால், கூட்டுறவுத்துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக செல்லூர் ராஜூ குறிப்பிட்டார்.

Minister Sellur Raju warns about DMK ruling in Tamilnadu.

அடுத்த செய்தி