ஆப்நகரம்

அமைச்சர் மனைவிக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி!

அமைச்சர் செல்லூர் ராஜூவின் மனைவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 4 Jul 2020, 1:12 pm
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. அதேசமயம், சிகிச்சைக்கு பிறகு இதுநாள்வரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளோரின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
Samayam Tamil sellur raju


கொரோனா வைரஸால் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், அரசுப் பணியாளர்கள், தடுப்புப் பணியில் ஈடுபடுவோர் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

அரசு ஊழியர்கள், காவலர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது.

இருபதாயிரம் ரூபாய்க்கு இரட்டை கொலையா? காவல் நிலையத்தில் நடந்த பேரம்!

இந்நிலையில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் மனைவி ஜெயந்திக்கு கடந்த சில நாள்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து அவருக்கு நடைபெற்ற கொரோனா பரி சோதனையில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் அமைச்சர் செல்லூர் ராஜூக்கு நடைபெற்ற கொரோனா சோதனையில் அவருக்கு பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.

அடுத்த செய்தி