ஆப்நகரம்

பள்ளிகள் திறப்பு எப்போது? -அமைச்சர் சொல்வது இதுதான்!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

Samayam Tamil 24 Jul 2020, 6:23 pm
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளின் முக்கிய அம்சமாக, நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் கடந்த மார்ச் 16 ஆம் தேதி முதல் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.
Samayam Tamil minister


கொரோனா அச்சம் காரணமாக, நான்கு மாதங்களுக்கு மேலாக பள்ளிகளை திறக்க முடியாததன் காரணமாக, நடப்பு கல்வியாண்டுக்கான (2020-21 ) பாடங்களை, தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன் -லைன் மூலம் நடத்தி வருகின்றன.

இருப்பினும், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது. இதையடுத்து, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

ஆகஸ்ட் 3 இல் மாணவர் சேர்க்கை தொடக்கமா? - பள்ளிக் கல்வித் துறை விளக்கம்

"செப்டம்பர் மாதத்துக்குள் பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. இருப்பினும், பெற்றோர்களின் கருத்தைக் கேட்டறிந்த பிறகுதான் இந்த விஷயத்தில் அரசு இறுதி முடிவெடுக்கும்.

தற்போதைக்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் அவர்கள் வீட்டில் இருந்தபடியே பாடங்களை படிக்க வசதியாக ஆன்-லைன் வகுப்புகளை தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும்.

கல்லூரி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்: செமஸ்டர் தேர்வு இல்லை!

இதேபோன்று 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை விரைவில் வழங்கவும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியிடவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன" என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அண்டை மாநிலமான ஆந்திராவில், செப்டம்பர் 5 ஆம் தேதி பள்ளிகளை மீண்டும் திறக்க அம்மாநில அரசு திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி