ஆப்நகரம்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் புதிய தகவல்!

பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.

Samayam Tamil 22 Oct 2020, 10:59 am
கோவிட்-19 பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. பொது முடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு எப்போது என்பதே தொடர்ந்து எழுப்பப்படும் கேள்வியாக இருந்தது.
Samayam Tamil minister sengottaiyan says about school reopening in tamilnadu
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் புதிய தகவல்!



மத்திய அரசு அனுமதி

இதனிடையே, பொது முடக்கத்தை நீட்டித்துள்ள வருகிற 31ஆம் தேதி வரை மத்திய அரசு, UNLOCK 5.0 இன் கீழ் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர இதர பகுதிகளில் மேலும் சில நடவடிக்கைகளுக்கு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, பள்ளி, பயிற்சி நிறுவனங்களை பகுதி வாரியாக திறப்பது குறித்து அக்டோபர் 15ஆம் தேதிக்கு மேல் மாநிலங்கள் முடிவெடுக்கலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசுகள் ஆலோசனை

பள்ளிகள் திறப்பிற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றன.

தமிழகத்தில் நிலைமை

தமிழகத்தை பொறுத்தவரை அக்டோபர் 1ஆம் தேதி முதல் 9 - 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்குச் சென்று சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த அறிவிப்பு பின்னர் திரும்பப் பெறப்பட்டது.

அமைச்சர் சொன்ன தகவல்

இந்த நிலையில், ஈரோடு கோபிச்செட்டிப்பாளையம் அருகே கொளப்பலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு மக்கள் நலத் திட்டப்பணிகளை வழங்கினார். அப்போது தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்றும் அது தொடர்பாக எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை என்றும் அமைச்சர் பதிலளித்தார்.

அடுத்த செய்தி