ஆப்நகரம்

காலை உணவுலாம் போட நேரமில்லை என அமைச்சர் கூறியுள்ளார்!

சத்துணவு ஊழியர்களை வரவழைத்து மதிய உணவு தயார் செய்வதற்குதான் நேரம் போதுமானதாக இருப்பதாகவும், இதனால் அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்குவது என பரவும் செய்தி தவறானது என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

Samayam Tamil 13 Jan 2020, 9:44 am
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குக் காலை உணவு வழங்குவது தொடர்பான கேள்விக்குப் பதில் அளித்த பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் காலை உணவு வழங்குவது தொடர்பான செய்தி பொய் எனக் கூறினார்.
Samayam Tamil 173WDL8w


அரசுப் பள்ளிகளில் மதிய நேரத்தில் சத்துணவு வழங்வதைபோல, காலை நேரமும் உணவு வழங்கப்படும் எனச் செய்தி ஒன்று வாட்ஸ் ஆப், போன்ற சமூக வலைதளங்களில் வைரலாக இப்போது பரவி வருகிறது.

இந்த திட்டத்தின் மூலம் மாணவர்களின் ஆரோக்கியம் மேம்படுத்தப்படும் என்றும் அந்த வைரல் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த செய்திகளால், அரசுப் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் உற்சாகமடைந்தனர்.

இன்னைக்கும் லீவு- மொத்தம் 9 நாட்கள்; பொங்கல் விடுமுறையால் பள்ளி மாணவர்கள் குஷி!

இதுகுறித்து அரசு வட்டாரங்களிடம் கேட்டபோது, அப்படி திட்டங்கள் எதுவும் இப்போதைய நேரத்தில் வர வாய்ப்பில்லை எனக் கூறினர். இந்த சூழலில் இந்த சர்ச்சைக்கு அமைச்சர் செங்கோட்டையன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தனியார்ப் பள்ளி ஆண்டுவிழா நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றிருந்தார். இந்த விழாவில் பங்கேற்பதற்கு முன் நிருபர்களுக்குப் பேட்டி அளித்த அவர் கூறியதாவது:

அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கப்படும் என வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பரவுவதைப் பார்த்தோம். அது அவ்வளவு சாத்தியக் கூறுகள் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

பொங்கல் பரிசு வாங்கியாச்சா?- உடனே ரேஷன் கடைக்கு கிளம்புங்க; அப்புறம் வாங்க முடியாது!

ஏனெனில் மதிய உணவு தயார் செய்து வழங்குவதற்கான நேரம்தான் சத்துணவு ஊழியர்களுக்கு நேரம் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார். அமைச்சரின் இந்த கருத்து வாட்ஸ் ஆப் சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்த விட்டது. அதே நேரத்தில் காலை உணவு வழங்குவதில் என்ன சிரமம் எனப் பெற்றோர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி