ஆப்நகரம்

திருமண வீட்டில் மது விருந்துக்கு தடை: அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டம்!

திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாறவும், பயன்படுத்தவும் அனுமதியில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 24 Apr 2023, 12:21 pm
திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள், வீட்டு விசேஷங்கள் போன்றவற்றுக்கு லைசன்ஸ் பெற்று மதுபானங்கள் பரிமாற அனுமதி வழங்கப்படுவதாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த அறிவிப்பை மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார்.
Samayam Tamil senthil balaji


தமிழக அரசின் உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி ஐஏஎஸ் வெளியிட்ட அறிவிப்பில், “திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள், வீட்டில் நடைபெறும் நிகழ்வுகள், கொண்டாட்டங்கள் உள்ளிட்டவற்றில் மதுபானங்களை பயன்படுத்தலாம். இதற்காக கட்டணம் செலுத்தி சிறப்பு லைசென்ஸ் வாங்க வேண்டும். இதையடுத்து ஆட்சியர் உத்தரவின் பேரில் கலால் வரித்துறை துணை ஆணையர் அனுமதி வழங்குவார். இதன்மூலம் டாஸ்மாக் அல்லாத இந்திய மற்றும் வெளிநாட்டு மதுபானங்களையும் பரிமாறலாம்.

இதையொட்டி நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 7 நாட்களுக்கு முன்பாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் வர்த்தக ரீதியிலான மதுபான பயன்பாட்டிற்கு வருடாந்திர பதிவு கட்டணம் செலுத்தி சிறப்பு லைசென்ஸை பெற்றுக் கொள்ளலாம். ஒரே ஒருமுறை நடக்கும் நிகழ்வுகளுக்கு கூட அந்த நாளிற்கு மட்டும் கட்டணம் செலுத்தி லைசென்ஸ் பெற முடியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக எம்.எல்.ஏ வீட்டில் ஐடி ரெய்டு: மத்திய அரசை கண்டித்து சாலை மறியல்!
இந்த அறிவிப்பு பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது. படிப்படியாக மதுபானக் கடைகளை மூடுவதற்கு பதிலாக மது கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் விதமாக அரசு செயல்படுகிறதோ என்று உடனடியாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் இந்த அறிவிப்பை மறுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியுள்ளார்.

திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்வுகளில் மது விருந்து நடத்த அனுமதி இல்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஜி ஸ்கொயர் வருமான வரி சோதனை: லாபத்தில் திடீர் உச்சம் எப்படி? கேள்விகளால் துளைக்கும் அதிகாரிகள்!
“திருமண மண்டபங்களில் மதுபானம் அருந்த ஒருபோதும் அனுமதி வழங்கப்படமாட்டாது. விளையாட்டு மைதானங்களில் ஐபிஎல் போன்ற சர்வதேச விளையாட்டு நிகழ்ச்சிகளில் மட்டும் மதுபானம் பரிமாற அனுமதிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி