ஆப்நகரம்

விலகியிரு Vs ஒன்றிணைவோம்: ஸ்டாலின் -வேலுமணி: அறிக்கை போர்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 25 Apr 2020, 12:01 pm
அரசுக்கு எதிராக அவதூறு பரப்பியதாக கோவையைச் சேர்ந்த செய்தி இணையதள நிறுவனர் கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பிவருகின்றன.
Samayam Tamil எஸ்பி வேலுமணி ஸ்டாலின்


இந்நிலையில் மு.க.ஸ்டாலினும் இந்த விவகாரத்தில் அரசுக்கு தனது எதிர்ப்பை பதிவு செய்தார். மேலும் ஸ்டாலின் தொடர்ச்சியாக முன்வைக்கும் விமர்சனங்களுக்குப் பதிலாக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “கொரோனா தடுப்பு நடவடிக்கையில் எங்கள் கழக அரசுக்கு கிடைத்த மக்கள் ஆதரவை பார்த்து பொசுங்கிப் போன பொறாமை பிடித்த எதிர்கட்சி தலைவர் திரு ஸ்டாலின் என்ன செய்வதென்று தெரியாமல் வாய்க்கு வந்ததை பேசுவதையும் கண்டதையும், காணாததையும் நினைத்து வெற்று அறிக்கை வெளியிடுவதை காலை கடமை போல வாடிக்கையாக வைத்திருக்கிறார். இந்த காலகட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் துறை மூலம் எவ்வளவு பணிகள் நடக்கின்றன, சேவைகள் போன்றவற்றை ஆய்வு கூட்டங்கள் நடத்தி உரிய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்து கண்காணித்து வருகிறேன்” என தான் செய்யும் பணிகள் குறித்து அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா: தமிழ்நாட்டில் நிலைமை எப்படி இருக்கிறது?

மேலும் கைதான செய்தி இணையதள நிறுவனர் குறித்தும், அந்த இணையதளம் குறித்தும் தனக்கு தெரியாது என்றும், அரசு ஊழியர் அளித்த புகாரின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

“இரவும் பகலும் பணியாற்றும் அரசு எது, சிறந்த முதல்வர், அமைச்சர்கள் யார் என்றும் பேரிடர் சமயத்தில் ஒட்டுமொத்த உலகமே ‘விலகியிரு’ என்று விழிப்புணர்வு செய்து கொண்டிருக்கும் போது, ‘ஒன்றிணைவோம் வா’ என்கிற தன்னுடைய வெற்று விளம்பரத்தின் படப்பிடிப்பு காட்சிகளுக்காக தொகுதியில் நிவாரணம் தருவது போல நடித்துக்கொண்டிருந்தது யார் என்றும் மக்களுக்கு நன்றாகவே தெரியும்” என்று அமைச்சர் காட்டாமாக கூறியுள்ளார்.

அடுத்த செய்தி