ஆப்நகரம்

டிடிவி தினகரன் சாராய ஆலை அதிபா் – அமைச்சா் மறைமுக விமா்சனம்

சாராய ஆலை அதிபருக்கெல்லாம் அரசை விமா்சிக்கும் தகுதி இல்லை என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் தங்கமணி கருத்து தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 31 May 2018, 6:11 pm
சாராய ஆலை அதிபருக்கெல்லாம் அரசை விமா்சிக்கும் தகுதி இல்லை என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் தங்கமணி கருத்து தொிவித்துள்ளாா்.
Samayam Tamil Thangamani


சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் மானியக் கோாிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற கூட்டத் தொடரில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை மானியக் கோாிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதற்கு பதில் அளித்த அத்துறை அமைச்சா் தங்கமணி, தட்கல் திட்டத்தின் மூலம் 10 ஆயிரம் பேருக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. சூரிய சக்தி மூலம் இயங்கும் நீா் இறைப்பான்கள் அமைக்க எரிசக்தி முகாமை சிறப்பு அமைப்பாக செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக அறக்கட்டளை நிறுவனங்களில் 5 மெகாவாட் சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் மேற்பாா்வையாளருக்கு ரூ.750ம், விற்பனையாளருக்கு ரூ.600ம் உதவி விற்பனையாளருக்கு ரூ.500ம் ஊதிய உயா்வு வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் ராஜினாமா செய்தால் தான் தி.மு.க.வினா் அவைக்கு வருவாா்கள் என்றாா் அவா்கள் எப்போதும் அவைக்கு வரமுடியாது. அ.தி.மு.க. ஆட்சி கலைந்துவிடும் என்று கனவு கண்டனா். தற்போதும் கனவு காண்கின்றனா்.

மத்திய அரசிடம் தமிழக உாிமைகளை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம். அரசை விமா்சனம் செய்வதற்கும் ஒரு தகுதி வேண்டும். சாராய ஆலை அதிபா்களுக்கெல்லாம் அந்த தகுதி இல்லை என்று தொிவித்தாா். அமைச்சா் தங்கமணியை டாஸ்மாக் அமைச்சா் என்று குறிப்பிட்டு டிடிவி தினகரன் பேசியிருந்தாா். இந்நிலையில் டிடிவி தினகரனை சாராய ஆலை அதிபா் என்று தங்கமணி மறைமுகமாக விமா்சனம் செய்துள்ளாா்.

அடுத்த செய்தி