ஆப்நகரம்

ஏதாச்சும் அசம்பாவிதம் நடந்தால் நான் பொறுப்பேற்று கொள்கிறேன்: மின்துறை அமைச்சர் தங்கமணி!

மின் துறையில் அலட்சியம் காரணமாக ஏதேனும் விபத்துக்கள் நடந்தால், அதற்கு நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

TNN 3 Nov 2017, 3:43 pm
சென்னை: மின் துறையில் அலட்சியம் காரணமாக ஏதேனும் விபத்துக்கள் நடந்தால், அதற்கு நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil minister thangamani responsible for all electricity accidents
ஏதாச்சும் அசம்பாவிதம் நடந்தால் நான் பொறுப்பேற்று கொள்கிறேன்: மின்துறை அமைச்சர் தங்கமணி!


தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்மழையால், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

தேங்கிய மழை நீரை அகற்றும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இருப்பினும் கவனக்குறைவு காரணமாக, கொடுங்கையூரில் தேங்கிய மழை நீரில் விழுந்த கிடந்த மின் கம்பியால் இரு சிறுமிகள் உயிரிழந்தனர்.

இதேபோல் திருவாரூரில் மழையில் அறுந்து கிடந்த மின்சார ஒயரால், விவசாயி ஒருவர் பலியானார். இதையடுத்து சென்னையில் அமைச்சர் சரோஜா, வீரமணி மற்றும் மின்வாரிய அதிகாரிகளுடன் மின் துறை அமைச்சர் தங்கமணி ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தங்கமணி, சென்னையில் மின்வாரிய அதிகாரிகள் 5 குழுவாக பிரிந்து பணியாற்றி வருகின்றனர்.

மின்வாரிய அதிகாரிகளின் கவனக்குறைவு, மின்பாதுகாப்பு உபகரணங்களின் பற்றாக்குறை காரணமாக, அசம்பாவிதங்கள் நடந்தால் நானே பொறுப்பேற்று கொள்கிறேன் என்று கூறினார்.

Minister Thangamani responsible for all electricity accidents.

அடுத்த செய்தி