ஆப்நகரம்

கொரோனாவில் இருந்து குணமடைந்தார் அமைச்சர் தங்கமணி

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் தங்கமணி குணமடைந்து விட்டதாகவும், இன்று மாலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் மருத்துமனை தெரிவித்துள்ளது

Samayam Tamil 20 Jul 2020, 2:47 pm
கொரோனாவைத் தடுக்கும் பணியில் முன்னணியில் நிற்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோரும் தன்னார்வலர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
Samayam Tamil தங்கமணி
தங்கமணி


திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கொரோனா நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில் அவருக்கு தொற்று ஏற்பட்டது. பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

அதன் தொடர்ச்சியாக முன்னாள் அமைச்சர் வளர்மதி, அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், செல்லூர் ராஜூ, நிலோபர் கபில் என அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. நேற்று மட்டும் மூன்று எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திமுகவை இந்து விரோதியாக சித்தரிக்க முயற்சி: மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு

அந்த வகையில், தமிழக மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

மருத்துவமனை செய்தி குறிப்பு


இந்த நிலையில், கடந்த 8 ஆம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அமைச்சர் தங்கமணிக்கு அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சையின் மூலம் அவர் பூரண குணமடைந்துள்ளதாகவும், இன்று மாலை அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளதாகவும் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, கே.பி.அன்பழகன் ஆகியோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி