ஆப்நகரம்

தன்னுடைய சுயநலத்துக்காக 18 எம்எல்ஏ.,க்களை காவு வாங்கியவர் டிடிவி: அமைச்சர் உதயகுமார்

இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற 18 எம்எல்ஏ.,க்களை தான் காவு கொடுத்துவிட்டு, சுயேட்சையாக டிடிவி ஜெயித்து உள்ளார்- அமைச்சர் உதயகுமார்

Samayam Tamil 26 Oct 2018, 12:52 pm
தன் ஒருவருடைய சுயநலத்துக்காக 18 எம்எல்ஏ.,க்களை காவு வாங்கியவர் டிடிவி தினகரன் என்று அமைச்சர் உதயகுமார் விமர்சித்து உள்ளார். வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி. உதயகுமார் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: ‘தற்போது தகதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏ.,க்களும் ஜெயலலிதாவின் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றவர்கள்.
Samayam Tamil rb udhaya kumar


இந்த 18 எம்எல்ஏ.,க்களும் யாருடைய பேச்சைக் கேட்கக் கூடாதோ அவர்களுடைய பேச்சைக் கேட்டு, எதை இழக்கக்கூடாதோ அதை இழந்து இன்று பதிவியை இழந்து துன்பத்தில் இருக்கிறார்கள். எங்களை அழிக்க நினைத்து இப்போது அவர்களே அழிந்து விட்டார்கள். வினை விதைத்தவன் வினை அறுப்பான் திணை விதைத்தவன் திணை அறுப்பான்.

வாயிலேயே வடை சூடுபவர் டிடிவி தினகரன். தீர்ப்புக்கு முன்பு நாங்கள் அப்படி இப்படி என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால், இப்போது எல்லாம் அனுபவம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தீர்ப்பினால் தினகரனுக்கு இழப்பு ஒன்றும் இல்லை.

சொல்லப்போனால், அவர் ஒருவருடைய நலனுக்காக, இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற 18 எம்எல்ஏ.,க்களை தான் காவு கொடுத்துவிட்டு, சுயேட்சையாக அவர் ஜெயித்து உள்ளார். தினகரன் இப்போது 18 எம்எல்ஏ.,க்களை காப்பாற்ற முடியுமா, இழந்த எம்எல்ஏ பதவியை மறுபடி பெற்றுத்தர முடியுமா. ஒரு அரசு என்பது சாதாரண விஷயம் இல்லை. மக்களுக்கு சேவை செய்ய தான் அரசு அமைந்துள்ளது. அந்த அரசை வீட்டுக்கு அனுப்பிவிடுவேன் என்று சொல்லுவது தவறு.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி