ஆப்நகரம்

கனவு கோட்டைக்கு இரும்புக் கோட்டை கட்டிய அதிமுக; யாரை கலாய்க்கிறார் உதயகுமார்!

தமிழக அரசு நல்லாட்சி விருது வென்றதை விமர்சித்த எதிர்க்கட்சி தலைவரை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக சாடியுள்ளார்.

Samayam Tamil 30 Dec 2019, 10:58 am
நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மாநிலங்களின் பட்டியலை மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டது. அதில் நிர்வாகத் திறனில் தமிழகம் முதலிடம் பிடித்தது.
Samayam Tamil Udhayakumar


இதேபோல் பல்வேறு துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. இதனை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். கும்மி எரியுது, குடல் கருகுது, குளு குளு ஊட்டி ஒரு கேடா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

கோலத்திற்கு மாறிய போராட்டக் களம் - அதுவும் யார் வீட்டு முன்பு தெரியுமா!

உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் இந்த சூழலில் மத்திய அரசு இப்படியொரு அறிக்கையை வெளியிடக் காரணம் என்ன? இந்த அறிக்கைக்கு யார் ஒப்புதல் அளித்தது? கூட்டணியை தூக்கி பிடிக்கும் வகையில் வேலை நடைபெற்றுள்ளதா?

இதுபற்றி தமிழக மக்களுக்கு மத்திய அரசு விளக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின், முதல்வர் நாற்காலியில் அமர்ந்து குடும்ப ஆட்சியை நிலைநாட்டிக் கொள்ளலாம் என்று ஸ்டாலின் கனவு கோட்டை கட்டினார்.

விறுவிறு வாக்குப்பதிவு- இரண்டாம் கட்டத் தேர்தலில் இப்படியொரு ஆர்வம்!

ஆனால் அவரது எண்ணத்தை நிறைவேற்ற முடியாதவாறு அதிமுக இரும்புக்கோட்டை கட்டியுள்ளது. முதலமைச்சர் பழனிசாமியின் எளிமை, பணிவு, அரசியல் வெற்றி குறித்து சிறுபிள்ளைத்தனமாக பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறார்.

வெறுப்பை உமிழும் வகையில் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை மத்திய அரசு தெளிவாக விளக்கம் அளித்துள்ளது.

நிர்வாகக் குளறுபடியால் தேர்தல் நிறுத்தம்: வாக்காளர்கள் அதிர்ச்சி!

இருப்பினும் தமிழக அரசுக்கு எதிராக மக்களை குழப்பம் வகையில் ஸ்டாலின் நடந்து கொள்கிறார். இலங்கை தமிழர்களின் வாழ்வில் எண்ணற்ற துயரங்களை ஏற்படுத்தியது திமுக. எனவே அவர்களின் நலன் பற்றி பேச எந்த உரிமையும் அற்றது திமுக என்று ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டி உள்ளார்.

அடுத்த செய்தி