ஆப்நகரம்

Udayakumar: மதுரையில் எய்ம்ஸ் அமையாவிட்டால் ராஜினாமா – அமைச்சா் உதயகுமாா்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையாவிட்டால் எனது பதவியை ராஜினாமா செய்வேன் என்று வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 14 May 2018, 11:14 am
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையாவிட்டால் எனது பதவியை ராஜினாமா செய்வேன் என்று வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil Minister Udhayakumar


எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டம் தோப்பூா் பகுதியில் இந்த மருத்துவமனை அமைந்தால் 18 மாவட்ட மக்கள் பயன் பெறுவாா்கள். எனவே மதுரை மாவட்டம் தோப்பூா் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையாவிட்டால் எனது பதவியை ராஜினாமா செய்வேன் என்று நான் ஏற்கனவே அறிவித்திருந்தேன். எனது முடிவில் மாற்றம் இல்லை. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

மேலும் மத்திய அரசு தமிழகத்தில் பஸ் போா்ட் அமைக்க 3 இடங்களை தோ்வு செய்துள்ளது. அதில் மதுரையும் ஒன்று. பஸ்போா்ட், எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திருமங்கலம் தொகுதியில் அறிமுகப்படுத்தி. திருமங்கலம் தொகுதியை 234 தொகுதிகளுக்கு முதன்மையானதாக மாற்றுவேன் என்று தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி