ஆப்நகரம்

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திடீர் மயக்கம்; மருத்துவமனையில் அவசர அனுமதி!

தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சர் மயங்கி விழுந்ததை அடுத்து, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Samayam Tamil 19 Feb 2019, 10:24 pm
தமிழக அமைச்சரவையில் வீடு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர் ராதாகிருஷ்ணன். இவர் தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
Samayam Tamil Udumalai


அப்போது திடீரென மயங்கி விழுந்தார். உடனே ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

அப்போது அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து முதல்வர் பழனிசாமி மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார்.

இந்நிலையில் சிகிச்சைக்கு பின், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வீடு திரும்பினார்.

அடுத்த செய்தி