ஆப்நகரம்

மோசடி வழக்கு : அமைச்சர் விஜயபாஸ்கரனின் மாமனாருக்கு சிறைதண்டனை

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரனின் மாமனாருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2ஆயிரம் அபராதமும் விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TNN 8 May 2017, 9:00 pm
சென்னை : தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரனின் மாமனாருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2ஆயிரம் அபராதமும் விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil minister uncle got imprison
மோசடி வழக்கு : அமைச்சர் விஜயபாஸ்கரனின் மாமனாருக்கு சிறைதண்டனை


தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் சி.விஜயபாஸ்கரன். இவரது மாமனார் சுந்தரம். சுந்தரத்தின் அண்ணன் துரை சாமி. வணிக வளாக வாங்கியது தொடர்பான ஓப்பந்தந்தில் சுந்தரமும் , அவரது தம்பியும் கோபாலும் முறைகேடு செய்தனர் என்று துரைச்சாமி கோவை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு கோவை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சுந்தரமும், சுந்தரத்தின் சகோதரர் கோபாலும் வணிக வளாக வாங்கியது தொடர்பான ஓப்பந்தந்தில் துரைச்சாமியின் பெயரை நீக்கி முறைக்கேடு செய்தது நிருபிக்கப்பட்டுள்ளனது. எனவே இருவருக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், இரண்டாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது" என்று உத்தரவிட்டார்.
minister uncle got imprison

அடுத்த செய்தி