ஜெயலலிதாவின் மரணத்தை சிபிஐ விசாரித்து அறிக்கை அளித்தால் அமைச்சர் விஜய பாஸ்கர்தான் முதல் குற்றவாளியாக இருப்பார் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜெயலலிதா மரணத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி ஓ.பி.எஸ் அணியினர் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.சென்னையில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் ஓ.பன்னீர் செல்வம் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில் இன்று மாலை உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட ஓ.பன்னீர் செல்வம்,பின்னர் அங்கிருந்த ஆதரவாளர்களிடையே உரையாற்றினார்.
“மக்கள் இயக்கமாக எஃகு கோட்டையாக இருந்த அதிமுகவை இன்று ஒரு குடும்பம் ஆட்சி செய்கிறது.அந்த குடும்பத்தின் ஆதிக்கத்தில் இருந்து அதிமுகவை மீட்பதற்கான தர்ம யுத்தத்தில் நாம் தொடங்கியுள்ளோம்.தர்ம யுத்தத்தின் நோக்கம் ஜெயலலிதாவின் மரணம் குறித்த சிபிஐ விசாரணை.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க வேண்டுமானால்,முதலில் என்னிடம் தான் விசாரிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கூறியுள்ளார்.விசாரணை வேண்டும் என சொல்பவனே நான் தானே.என்னிடம் வந்து விசாரணை நடத்தட்டும்.எனக்கு தெரிந்த உண்மைகள் எல்லாவற்றையும் கூறுகிறேன்.
சிபிஐ விசாரணை முடிந்து உண்மையான அறிக்கை தாக்கல் செய்தால்,அதில் முதல் குற்றவாளியாக அமைச்சர் விஜய பாஸ்கர் தான் இடம்பெற்றிருப்பார்.” என ஓ.பன்னீர் செல்வம் அமைச்சரை விளாசித் தள்ளியுள்ளார்.
minister vijaya bhaskar is the first accused in jayalalitha death mystry,says ops
ஜெயலலிதா மரணத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி ஓ.பி.எஸ் அணியினர் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.சென்னையில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் ஓ.பன்னீர் செல்வம் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில் இன்று மாலை உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட ஓ.பன்னீர் செல்வம்,பின்னர் அங்கிருந்த ஆதரவாளர்களிடையே உரையாற்றினார்.
“மக்கள் இயக்கமாக எஃகு கோட்டையாக இருந்த அதிமுகவை இன்று ஒரு குடும்பம் ஆட்சி செய்கிறது.அந்த குடும்பத்தின் ஆதிக்கத்தில் இருந்து அதிமுகவை மீட்பதற்கான தர்ம யுத்தத்தில் நாம் தொடங்கியுள்ளோம்.தர்ம யுத்தத்தின் நோக்கம் ஜெயலலிதாவின் மரணம் குறித்த சிபிஐ விசாரணை.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க வேண்டுமானால்,முதலில் என்னிடம் தான் விசாரிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கூறியுள்ளார்.விசாரணை வேண்டும் என சொல்பவனே நான் தானே.என்னிடம் வந்து விசாரணை நடத்தட்டும்.எனக்கு தெரிந்த உண்மைகள் எல்லாவற்றையும் கூறுகிறேன்.
சிபிஐ விசாரணை முடிந்து உண்மையான அறிக்கை தாக்கல் செய்தால்,அதில் முதல் குற்றவாளியாக அமைச்சர் விஜய பாஸ்கர் தான் இடம்பெற்றிருப்பார்.” என ஓ.பன்னீர் செல்வம் அமைச்சரை விளாசித் தள்ளியுள்ளார்.
minister vijaya bhaskar is the first accused in jayalalitha death mystry,says ops