ஆப்நகரம்

இந்திராகாந்தி முதல்வரா பிரதமரா? அமைச்சர் விஜயபாஸ்கர் கண்டுபிடிப்பு

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியை பிரதமர் என்று கூறுவதற்குப் பதில் முதல்வர் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் பொதுக்கூட்டத்தில் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 20 Jun 2018, 7:52 pm
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியை பிரதமர் என்று கூறுவதற்குப் பதில் முதல்வர் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் பொதுக்கூட்டத்தில் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil vijayabaskar.


இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் மகள் இந்நதிரா காந்தி. இவர் 1980 முதல் 1984 வரையில் பிரதமர் பதவி வகித்தார். 1984ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி இந்திராவின் சொந்தப் பாதுகாவலரே அவரை சுட்டுக் கொண்டார்.

இந்நிலையில், இந்திராகாந்தியை பிரதமர் என்று கூறுவதற்குப் பதில் முதல்வர் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ‘மறைந்த முன்னாள் முதல்வர் இந்திராகாந்தி பதவியில் இருக்கும் போது, தமிழக்தில் திமுக ஆட்சி நடந்தது’. இவ்வாறு பேசினார்.

இந்த வீடியோ வெளியான அடுத்த சில நிமிடங்களிலேயே அமைச்சர் விஜயபாஸ்கரை கேலி செய்யும் விதமாக நெட்டிசன்கள் மீம்ஸ்களை போடத் துவங்கினர்.

அடுத்த செய்தி