ஆப்நகரம்

நீட் விவகாரத்தில் இருதரப்புக்கும் பாதிப்பு ஏற்படாது: அமைச்சர் விஜயபாஸ்கர்...!

நீட் தேர்வு விவகாரத்தில் இருதரப்புக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

TNN 18 Aug 2017, 11:17 am
டெல்லி: நீட் தேர்வு விவகாரத்தில் இருதரப்புக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil minister vijayabhaskar tells about neet justice
நீட் விவகாரத்தில் இருதரப்புக்கும் பாதிப்பு ஏற்படாது: அமைச்சர் விஜயபாஸ்கர்...!


டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக அரசு தொடர்ந்து நீட் தேர்வை எதிர்த்து வருவதாக கூறினார். பெரும் சட்டப்போராட்டம் நடைபெற்று வருவதாகவும், அரசு இடங்களுக்கு மட்டுமே விலக்கு கேட்டுள்ளதாகவும் கூறினார்.

இரு தரப்பிற்கும் பாதகமில்லாமல் தமிழக அரசு நல்ல முடிவை எடுக்கும் என்றார். நீட் தேர்வு எழுதியவர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும், எந்த மாணவரும் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

நீட் விவகாரத்தில் தாமதம் என்பது இல்லை; பல்வேறு துறைகள் சார்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மருத்துவக் கவுன்சில் தான் நீட் தேர்வைக் கொண்டு வந்தது. நடைமுறையில் ஏற்படும் பிரச்சனைகளே உள்ளன என்றும், தமிழக அரசுக்கு எந்தவித பின்னடைவும் இல்லை என்றும் தெரிவித்தார்.

ஓராண்டுக்கு விதிவிலக்கு கிடைத்தது நமது வெற்றியே என்றும், விலக்கு அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி என்றும் விஜயபாஸ்கர் கூறினார். கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதாலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

மத்திய, மாநில அரசுகள் எடுத்த கடும் முயற்சியின் காரணமாகவே சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளது. கவுன்சிலிங்கிற்கு 6 நாட்கள் மட்டுமே போதுமானது என்றார்.

Minister Vijayabhaskar tells about NEET justice.

அடுத்த செய்தி