ஆப்நகரம்

ஜூலை 14 ஆம் தேதி அமைச்சரவை கூட்டம்..! முக்கிய முடிவுகள் வெளியாகும் என தகவல்...

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாகும் நிலையில் வரும் 14 ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.

Samayam Tamil 11 Jul 2020, 4:06 pm
தமிழகத்தில் வரும் 31 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு மேற்கொண்டுள்ள கொரோனா தடுப்பு பணிகள் நல்ல பலன் கொடுத்துள்ளதாகவும், அடுத்த பொதுமுடக்கத்துக்கு வாய்ப்பில்லை எனவும் முதல்வர் பழனிசாமி சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
Samayam Tamil tamil nadu cabinet meeting


ஆரம்பத்தில் கொரோனா பாதிப்பு சென்னையில் அதிகரித்து வந்த நிலையில், தற்போது சற்று குறைந்துள்ளது. அதே சமயம், சென்னையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக செங்கல்பட்டு, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. மாநில அளவில் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகரித்தாலும், பலி எண்ணிக்கை 60 க்கும் மேல் நீடித்து வருகிறது.

இந்த சூழலில் ஏற்கெனவே பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், கல்லூரிகளில் நடத்தப்படவேண்டிய கடைசி செமஸ்டர் இன்னும் நிலுவையில் உள்ளது. அதற்கான தெளிவான முடிவுகளும் அரசால் இன்னும் எடுக்கப்படவில்லை. மாறாக, தற்போதைய சூழலில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படாது என முதல்வர் பழனிசாமி மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியாலுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில், டெல்லியில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

செமஸ்டர் தேர்வு நடத்த முடியாது: முதல்வர் கடிதம் -ஹேப்பி மோடில் மாணவர்கள்!

இந்நிலையில், வரும் 14 ஆம் தேதி ( செவ்வாய்க்கிழமை ) தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்கூட்டத்தில், கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்துவது, தளர்வுகள், செமஸ்டர் தேர்வுகள், தொடர்பாக ஆலோசனைகள் நடத்தப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அதிமுக அரசியலில் தற்போது சசிகலா விடுதலை சம்மந்தமான பல்வேறு பேச்சுகள் அடிபடுகின்றன. இதுகுறித்தும், ஒற்றை கருத்து ஆலோசனை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி