ஆப்நகரம்

தமிழ்நாட்டில் புயல் நிவாரண பணிகளுக்கு அமைச்சர்கள் நியமனம்: மாவட்டம் வாரியாக

தமிழகத்தில் புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 5 Dec 2020, 8:24 pm
வங்கக்கடலில் உருவாகியுள்ள புரேவி புயல் கடந்த 40 மணி நேரத்துக்கும் மேலாக ஒரே இடத்தில் நிலைகொண்டுள்ளது. புயல் இன்னும் நேரடி தாக்குதலை ஏற்படுத்தவில்லை என்றாலும் அதன் காரணமாக தமிழகத்தில் குறிப்பாக கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. மேலும் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையையும் வானிலை மையம் விடுத்துள்ளது.
Samayam Tamil edappadi palanisamy


புரேவி புயல் மற்றும் கன மழை காரணமாக இதுவரை தமிழகத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், புயல், மழையால் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவியை தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், இறந்த ஒரு மாடுக்கு ரூ.30,000, எருதுக்கு ரூ.25,000, கன்றுக்கு ரூ.16,000, ஆடுக்கு ரூ.3,000 நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ள முதல்வர் பழனிசாமி, புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு உரிய நிவாரண உதவிகள் வழங்கப்படும் என கூறியுள்ளார்.

இந்நிலையில், தமிழகத்தில் புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள மாவட்ட வாரியாக அமைச்சர்களை தமிழக அரசு நியமித்துள்ளது. அதன்படி, சென்னை மாவட்டத்துக்கு அமைச்சர் ஜெயகுமார், மாபா.பாண்டியராஜன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டத்துக்கு அமைச்சர்கள் தங்கமணி, எம்.சி.சம்பத் ஆகியோரும், திருவாரூர் மாவட்டத்துக்கு அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், காமராஜ் ஆகியோரும், நாகை மாவட்டத்துக்கு எஸ்.பி.வேலுமணி, ஓ.எஸ்.மணியன், விஜயபாஸ்கர் ஆகியோரும், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு செங்கோட்டையன், பெஞ்சமின் ஆகியோரும் புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

அடுத்த 12 மணி நேரத்தில் தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருமாறும்

முன்னதாக கடலோர மற்றும் ஆற்றோரங்களில் வசித்து வந்த 36,986 பேர் 363 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறிய முதல்வர் பழனிசாமி, அவர்களுக்கு தேவையான சூடான உணவு, குடிநீர், பாய், போர்வை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் பொதுமக்களுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 1 லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

அடுத்த செய்தி