ஆப்நகரம்

பவானிசாகர் அணை திறப்பு: விவசாயிகள் கொண்டாட்டம்!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகர் அணை இன்று திறக்கப்பட்டது.

Samayam Tamil 14 Aug 2020, 7:53 am
அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன் உள்ளிட்டோர் பவானி சாகர் அணையை பாசனத்திற்காக இன்று காலை 7 மணியளவில் திறந்துவைத்தனர்.
Samayam Tamil bhavanisagar dam


தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகளும், பொது மக்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

கேரளா, நீலகிரி பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருகிறது. 105 அடி உயரம் கொண்ட பவானிசாகர் அணையில் தற்போது 102 அடி வரை தண்ணீர் உள்ளது. 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அணையில் 30.2 டிஎம்சி நீர் உள்ளது. மேலும் 36,014 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது.

Chennai Rains: புரட்டி எடுக்கப் போகிறதா கனமழை; தமிழகத்தில் இன்றைய நிலவரம் என்ன?

1400 கன அடி நீர் பவானி மற்றும் தடப்புளி, அரக்கன்கோட்டை பகுதிகளுக்கு திறந்துவிடப்படுகிறது. கீழ்பவானி பாசன விவசாயிகள் கோரிக்கை வைத்தன் காரணமாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் ஆகியோர் இன்று திறந்து வைத்தனர்.

இதனால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். 120 நாள்கள் இந்த தண்ணீர் திறந்துவிடப்படும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு: எவ்வளவு லட்சம் பேர் கருத்து சொல்லியிருக்காங்க தெரியுமா?

நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், விவசாயிகள் பயன்பெறும் வகையில் மன்னர்கள் காலத்தில்தான் குடிமராமத்து பணிகள் செய்யப்பட்டன. விவசாயக் குடும்பத்திலிருந்து வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாநிலம் முழுவதும் மராமத்து பணிகளை சிறப்பாக செய்துவருகிறார்.

அடுத்த செய்தி