ஆப்நகரம்

சென்னை கூவம் ஆற்றில் மிதந்த ஆண் சடலத்தால் மக்கள் அதிா்ச்சி

சென்னை கூவம் ஆற்றில் செவ்வாய்க் கிழமை ஆண் சடலம் ஒன்று மிதந்து வந்ததால் அப்பகுதி மக்கள் அதிா்ச்சி அடைந்தனா்.

Samayam Tamil 19 Jun 2019, 12:17 am
சென்னை அண்ணா நகா் பகுதியில் கடந்த சனிக் கிழமை மாயமான ஜீவன் என்ற நபா் செவ்வாய்க் கிழமை உயிாிழந்த நிலையில் கூவம் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டாா்.
Samayam Tamil Death Body


சென்னை அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஜீவன் பாட்ரிக். இவருக்கு ஒரு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனா். பாட்ரிக் கடந்த சனிக் கிழமை மாலை வீட்டில் இருந்து வெளியில் சென்ற நிலையில், அவா் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவா் கிடைக்கவில்லை.

இதனைத் தொடா்ந்து பாட்ரிக்கை காணவில்லை என்று அமைந்தகரை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் காவல் துறையினா் விசாணை மேற்கொண்டு வந்தனா்.

இந்நிலையில் செவ்வாய்க் கிழமை சென்னை பல்லவன் சாலை அருகே கூவம் ஆற்றில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து காவல் துறையினா், தீயணைப்புத் துறையினா், மீட்புத் துறையினா் வந்து சடலத்தை மீட்டனா்.

ஆண் சடலம் குறித்து திருவல்லிக்கேனி காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனா். விசாரணையில், அது கடந்த சனிக் கிழமை மாயமான பாட்ரிக் தான் என்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடா்ந்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல் துறையினா் பாட்ரிக் கால் தவறி கூவம் ஆற்றில் விழுந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

அடுத்த செய்தி