ஆப்நகரம்

பாபநாசம் திரைப்பட பாணியில் கொலை!

காணாமல் போன சாஃப்ட்வேர் என்ஜினியர் ஒருவர் கல்குவாரிக்கு அருகில் இருக்கும் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

TNN 10 Jul 2017, 8:54 pm
நெல்லை : காணாமல் போன சாஃப்ட்வேர் என்ஜினியர் ஒருவர் கல்குவாரிக்கு அருகில் இருக்கும் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil missing techie found dead in car in tamil nadu
பாபநாசம் திரைப்பட பாணியில் கொலை!


தூத்துக்குடி மாவட்டம் சண்முகபுரத்தை சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் (42). அமெரிக்காவின் கிரீன் கார்டு ஹோல்டரான இவர் சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார். தனது மனைவியுடன் ஏற்பட்ட பிரச்னை காரணாக தனியாக வாழ்ந்து வந்தார். மேலும் தன் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு விண்ணப்பித்தும் உள்ளார்.

இந்நிலையில் முத்துக்கிருஷ்ணன் அவரது காரில் அமர்ந்திருந்த நிலையில் நெல்லைக்கு அருகே உள்ள கல்குவாரி குளம் ஒன்றில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் 22ஆம் தேதி தனது காரில் நெல்லையில் உள்ள வழக்கறிஞரை சந்திக்க செல்வதாக தனது அம்மாவிடம் சொல்லிவிட்டு முத்துகிருஷ்ணன் புறப்பட்டு சென்றுள்ளார். அவர் திரும்பி வராததால் தூத்துக்குடி காவல்துறையானது, முத்துக்கிருஷ்ணனை காணவில்லை என்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.

இதனையடுத்து சாப்ட்வேர் இன்ஜினியர் முத்துக்கிருஷ்ணன் அவர்கள் நெல்லையை சேர்ந்த கும்பலால் கொலை செய்யப்பட்டு, தாழையூத்துக்கு அருகே உள்ள கல்குவாரி குளத்தில் காருடன் சேர்த்து மூழ்கடிக்கப்பட்டு சென்றது தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் அழுகிய நிலையில் இருந்த முத்துக்கிருஷ்ணனின் உடலை குளத்தில் இருந்து மீட்டனர். இந்த கொலை குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.

அடுத்த செய்தி