ஆப்நகரம்

ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி தீவிர ஆலோசனை; திருவாரூரில் போட்டியிட அதிரடி திட்டம்!

திருவாரூர் இடைத்தேர்தலில் மு.க.அழகிரி போட்டியிட ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

Samayam Tamil 14 Sep 2018, 12:11 pm
மதுரை: திருவாரூர் இடைத்தேர்தலில் மு.க.அழகிரி போட்டியிட ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
Samayam Tamil MK Alagiri


திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு பின், கட்சியில் தன்னை இணைத்துக் கொள்ள மு.க.அழகிரி தீவிர முயற்சி மேற்கொண்டார். சென்னையில் அமைதி பேரணி, ஆதரவாளர்களுடன் ஆலோசனை என பரபரப்பான அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில் மதுரையில் கருணாநிதி சிலை திறப்புக்கு அனுமதி கோரி, மாநகராட்சி நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இதையடுத்து தனது பிறந்த நாளையும், கருணாநிதி சிலை திறப்பையும் வரும் ஜனவரியில் மாநாடு போல நடத்த திட்டமிட்டிருக்கிறார். தற்போது நாள்தோறும் 4 மாவட்ட ஆதரவாளர்களை வரவழைத்து, மதுரை தயா திருமண மகாலில் ஆலோசனை நடத்தி வருகிறார். இதனை மிகவும் ரகசியமாக நடத்திக் கொண்டிருக்கிறார். அங்கு நடக்கும் விஷயங்களையும், நிகழ்வுகளின் புகைப்படங்களும் வெளியே வரக்கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறார்.

இந்நிலையில் தேனி மாவட்ட ஆதரவாளர் கூறுகையில், தலைவர் தொகுதியான திருவாரூரில் அண்ணன் அழகிரி போட்டியிட வேண்டும். நாங்கள் அங்கு வந்து வேலை செய்யத் தயார் என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு பதிலளித்த அழகிரி, தேர்தல் பண விளையாட்டாகி விட்டது. பொறுமையாக இரு என்று தெரிவித்துள்ளார். மற்றொரு நிர்வாகி, தனிக் கட்சி ஆரம்பிக்க வலியுறுத்தியுள்ளார்.

அதற்கு, அதற்கெல்லாம் நிறைய நடைமுறை இருக்கு. பொறுமையாக இருங்கள் என்று தெரிவித்துள்ளார். நேற்று திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதிலும் தனிக்கட்சி அல்லது தனி இயக்கம் உருவாக்க கோரிக்கை விடுத்துள்ளனர். இவற்றில் தனி இயக்கம் தொடங்க அழகிரிக்கு உடன்பாடு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக வரும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை ஆயுதமாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளார்.

MK Alagiri supporters want him to contest in Thiruvarur By Election.

அடுத்த செய்தி