ஆப்நகரம்

பண விவகாரத்தில் எத்தனை கருப்பு பண முதலைகள் சிக்கியது? - ஸ்டாலின்

கருப்பு பணத்தை வெளியே எடுக்க உயர் மதிப்பு பணத்தை திரும்பப்பெற்றது. பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கையால் மக்கள் நீங்கா துயரத்தை மட்டுமே அனுபவிக்கின்றனர் என தமிழக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

TNN 29 Dec 2016, 3:21 pm
கருப்பு பணத்தை வெளியே எடுக்க உயர் மதிப்பு பணத்தை திரும்பப்பெற்றது. பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கையால் மக்கள் நீங்கா துயரத்தை மட்டுமே அனுபவிக்கின்றனர் என தமிழக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil mk stalin accusation on demonetisation
பண விவகாரத்தில் எத்தனை கருப்பு பண முதலைகள் சிக்கியது? - ஸ்டாலின்


ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரூபாய் நோட்டை திரும்பப் பெறப்பட்ட விவகாரத்தில், 50 நாட்கள் பொறுத்துக்கொள்ளுங்கள். இது சிறிய கால சிரமம். ஆனால் நீண்ட கால பயன் என்றது. ஆனால் 50 நாட்களை கடந்த பின்னும் இன்னும் மக்கள் பணவிவகாரத்தில் துரத்தை மட்டுமே எதிர்கொண்டு வருகின்றனர்.

மோடியின் இந்த செயல் ஒருபுறம் என்றால், ரூபாய் நோட்டு பிரச்னையை தீர்க்க பிறமாநிலங்கள் பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. ஆனால் தமிழகத்தை ஆளும் அதிமுக., அவற்றை வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கின்றது.

பாராளுமன்றத்தில் 125 கோடி மக்களின் பிரச்னையை குறித்து பேசுவதற்கு நேரமில்லை என குற்றம் சுமத்தியுள்ளார். கருப்பு பண முதலைகளை பிடிக்க விரிக்கப்பட்ட வலை என்று கூறப்பட்ட பண விவகாரத்தால், எத்தனை கருப்பு பண முதலைகள் சிக்கியது என வெள்ளை அறிக்கை அளிக்க வேண்டும்.” என பேசினார்.

அடுத்த செய்தி