ஆப்நகரம்

தமிழக பந்த்: எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கைது

தமிழகத்தில் நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.

TNN 16 Sep 2016, 11:11 am
சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil mk stalin arrested while cauvery procession
தமிழக பந்த்: எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கைது


காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து கர்நாடகத்தில் வன்முறை வெடித்தது. தமிழர்களையும் தமிழக வாகனங்களையும் தாக்கி போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். தமிழக வாகனங்கள் பல இடங்களில் தீ வைத்து எரிக்கப்பட்டன.

இந்நிலையில், காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்தும், தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாய சங்கங்களில் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்படி, தமிழகம் மற்றும் புதுவையில் முழு அடைப்பு போராட்டம் இன்று காலை தொடங்கியது. மாலை 6 மணி வரை நடக்கும் இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஊர்வலமாக சென்று போராட்டத்தில் ஈடுபட்ட திமுக-வினர் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

அடுத்த செய்தி