ஆப்நகரம்

மகிழ்ச்சியுடன் நடக்கட்டும் சமத்துவ ஜல்லிக்கட்டு: மு.க.ஸ்டாலின்

இந்த ஆண்டு மகிழ்ச்சியுடன் நடக்கட்டும் சமத்துவ ஜல்லிக்கட்டு என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

TNN 25 Jan 2017, 1:20 pm
சென்னை: இந்த ஆண்டு மகிழ்ச்சியுடன் நடக்கட்டும் சமத்துவ ஜல்லிக்கட்டு என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil mk stalin asked to celebrate equality jallikattu this time
மகிழ்ச்சியுடன் நடக்கட்டும் சமத்துவ ஜல்லிக்கட்டு: மு.க.ஸ்டாலின்


இதுதொடர்பாக அவர் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக எழுந்த எழுச்சி மாபெரும் மக்கள் போராட்டமாக வெடித்தது. ஒட்டுமொத்தத் தமிழகமும் ஒன்றுபட்டுக் குரல் கொடுத்த காட்சி மெய்சிலிர்க்க வைத்தது. அங்கே சாதி அரசியலுக்கு சமாதி கட்டப்பட்டது! மதவேறுபாடு மாண்டது! எந்தவித பேதமுமின்றி, நான் தமிழண்டா... நான் தமிழச்சிடா... எனும் தமிழினப் பற்று ஒன்று மட்டுமே மேலோங்கி இருந்தது!

இனி ஜல்லிக்கட்டு நடைபெறும் ஊர்களில் எல்லாம் அதே போன்ற உணர்வு பளிச்சிட வேண்டும். சாதி வேற்றுமை மறந்து எல்லாரும் ஒன்றுகூடி தமிழினத்தின் பாரம்பரிய விளையாட்டில் பங்கேற்று அதனை சமத்துவ ஜல்லிக்கட்டாக ஆக்கிட வேண்டும்.

சாதி - மத பேதமின்றி - ஊன் உறக்கம் மறந்து - ஒன்று கூடிப் போராடி - தடியடிகளைத் தாங்கி, இரத்தம் சிந்தி, ஜல்லிக்கட்டு விளையாட்டைத் தொடர்ந்திடப் போராடிய மக்களுக்கு - இந்த சமத்துவ ஜல்லிகட்டு நிகழ்ச்சியே மகிழ்ச்சி தரும் என்பதை உணர்ந்து ஒற்றுமையாகச் செயல்படுவோம்!

இவ்வாறு தனது கடிதத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

MK Stalin asked to celebrate Pongal equality Jallikattu this time.

அடுத்த செய்தி