ஆப்நகரம்

ஒகி புயல் பாதிப்பை சீர்செய்ய களத்தில் இறங்கி உதவுங்கள்: திமுகவினருக்கு ஸ்டாலின் கோரிக்கை!

புயல் பாதித்த மக்களுக்கு சேவையாற்ற, திமுகவினர் முன்வந்து உதவி செய்ய வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

TNN 30 Nov 2017, 8:57 pm
சென்னை: புயல் பாதித்த மக்களுக்கு சேவையாற்ற, திமுகவினர் முன்வந்து உதவி செய்ய வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil mk stalin asked to help who affected in ockhi cyclone
ஒகி புயல் பாதிப்பை சீர்செய்ய களத்தில் இறங்கி உதவுங்கள்: திமுகவினருக்கு ஸ்டாலின் கோரிக்கை!


கன்னியாகுமரி கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக உருமாறியுள்ளது. இதற்கு ‘ஒகி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. புயலின் தாக்கம் காரணமாக கன்னியாகுமர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.

மேலும் பலத்த காற்று வீசி வருவதால், ஏராளமான மரங்கள் விழுந்துள்ளன. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே தேங்கியுள்ள நீரால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

புயல் பாதிப்பிற்கு 3 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிப்பு மற்றும் நிவாரணப் பணிகளை பார்வையிட தமிழக மூத்த அமைச்சர்கள் கன்னியாகுமரி விரைந்துள்ளனர். இந்நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, மாவட்டங்களில் ஒகி புயல் காரணமாக மழை பெய்து வருகிறது. அங்குள்ள மக்களுக்கு திமுவினர் உதவ வேண்டும்.

இதற்காக அரசு அதிகாரிகளுடன் இணைந்து, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

MK Stalin asked to help who affected in Ockhi cyclone.

அடுத்த செய்தி