ஆப்நகரம்

பதவி பறிபோனதால் ஜெ.,வை வைத்து அரசியலா? ஓ.பி.எஸ்க்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

பதவி பறிபோனதால் ஜெ.,வை வைத்து அரசியலா? என்று ஓ.பி.எஸ்க்கு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

TNN 26 Feb 2017, 2:20 pm
சென்னை: பதவி பறிபோனதால் ஜெ.,வை வைத்து அரசியலா? என்று ஓ.பி.எஸ்க்கு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
Samayam Tamil mk stalin asks ops for why do politics with jayalalitha dead
பதவி பறிபோனதால் ஜெ.,வை வைத்து அரசியலா? ஓ.பி.எஸ்க்கு மு.க.ஸ்டாலின் கேள்வி


ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியானதை அடுத்து, அரசு அலுவலகங்களில் இருந்து அவருடைய புகைப்படத்தை நீக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியதற்கு ஓ.பி.எஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதற்கு பதிலளித்துள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பதவியில் இருந்த வரை ஜெயலலிதா மரணம் பற்றி வாய்திறக்காமல் திடீர் அரசியல் ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

போயஸ் தோட்டத்தை ஆக்கிரமித்தோர் தயவில் முதல்வராக இருந்த வரை பன்னீர்செல்வம் பேசினாரா? என்றும் கூறியுள்ளார். பதவியை இழந்த பிறகே ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என ஓ.பி.எஸ் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்த திடீர் பரிவு ஏன் என்று மக்களுக்கு தெளிவாக தெரியும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

MK Stalin asks OPS for why do politics with Jayalalitha dead.

அடுத்த செய்தி