ஆப்நகரம்

வறட்சியால் விவசாயி சாகலையா; அப்புறம் எதுக்குயா நிவாரணம்? வரிந்து கட்டும் மு.க.ஸ்டாலின்

வறட்சியால் விவசாயிகள் சாகவில்லை எனில், மத்திய அரசிடம் வறட்சி நிவாரணம் கேட்பது ஏன் என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

TNN 28 Apr 2017, 2:37 pm
சென்னை: வறட்சியால் விவசாயிகள் சாகவில்லை எனில், மத்திய அரசிடம் வறட்சி நிவாரணம் கேட்பது ஏன் என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
Samayam Tamil mk stalin asks why tn govt acts like a fool in farmers issue
வறட்சியால் விவசாயி சாகலையா; அப்புறம் எதுக்குயா நிவாரணம்? வரிந்து கட்டும் மு.க.ஸ்டாலின்


சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப் பத்திரம் அளித்தது குறித்து கேள்வி எழுப்பினார். தமிழக அரசு மத்திய அரசிடம் வறட்சி நிவாரணம் கேட்டது பொய்யா? அல்லது விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பது பொய்யா? என்று குறிப்பிட்டார்.

விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று கூறிவிட்டு, மத்திய அரசிடம் நிவாரணம் கேட்பது முரண்பாடாக உள்ளது என்று தெரிவித்தார். விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதை விட அதை இல்லை என தமிழக அரசு கூறுவது கொடுமை என்று கூறினார். விவசாயிகள் பிரச்னை தொடர்பாக பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகவும், அனுமதி கிடைத்தவுடன் அவரை சந்தித்து பேச தயாராக இருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

MK Stalin asks why TN Govt acts like a fool in farmers issue.

அடுத்த செய்தி