ஆப்நகரம்

கொடைக்கானல் ஏரியில் மனைவியுடன் படகு சவாரி செய்த மு.க. ஸ்டாலின்

தேர்தல் பிரச்சாரம் முடித்துவிட்டு ஓய்வில் இருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் கொடைக்கானலில் மனைவி துர்கா உடன் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தார்.

Samayam Tamil 10 May 2019, 4:13 pm
தமிழகத்தில் எஞ்சியுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு வந்தார்.
Samayam Tamil கொடைக்கானலில் மனைவியுடன் படகு சவாரி செய்த ஸ்டாலின்
கொடைக்கானலில் மனைவியுடன் படகு சவாரி செய்த ஸ்டாலின்


தற்போது ஓய்வில் இருக்கும் அவர், கடந்த 8ம் தேதி மனைவி துர்கா உடன் கொடைக்கானல் சென்றார். கொடைக்கானலுக்கு அவர் வந்த போது தி.மு.க. செயலாளர் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கண்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.

ஸ்டாலின், ஏரிச்சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளார். ஓய்வில் இருப்பதன் காரணமாக, மனைவி துர்கா உடன் நட்சத்திர ஏரிக்கு வந்த ஸ்டாலின், அங்கு படகு சவாரி செய்து மகிழ்ந்தார்.

நட்சத்திர ஏரியில் ஸ்டாலினை பார்த்த பொதுமக்கள் சிலர் அவருடன் செல்ஃபி எடுத்து கொண்டனர். பல சுற்றுலா பயணிகளிடம் அவர் பேசினார். இந்நிலையில் இன்று ஸ்டாலின் மதுரைக்கு செல்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

அடுத்த செய்தி