ஆப்நகரம்

பாஜகவின் முழுநேர ஏஜெண்ட் கிரண்பேடி : மு.க.ஸ்டாலின் காட்டம்

புதுவை ஆளுநர், கிரிமினல் வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளவரை சட்டமன்ற உறுப்பினராக நியமித்தன் மூலம் பா.ஜ.க., அரசின் முழுநேர ஏஜெண்டாக மிகத்தாழ்ந்த “அரசியல் செய்கிறார்” என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

TNN 8 Jul 2017, 3:20 am
சென்னை : புதுவை ஆளுநர், கிரிமினல் வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளவரை சட்டமன்ற உறுப்பினராக நியமித்தன் மூலம் பா.ஜ.க., அரசின் முழுநேர ஏஜெண்டாக மிகத்தாழ்ந்த “அரசியல் செய்கிறார்” என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
Samayam Tamil mk stalin condemn kiran bedi
பாஜகவின் முழுநேர ஏஜெண்ட் கிரண்பேடி : மு.க.ஸ்டாலின் காட்டம்


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ," நேர்மையாளராகத் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் புதுவை ஆளுநர், கிரிமினல் வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளவரை சட்டமன்ற உறுப்பினராக நியமிக்க, தனக்கு இல்லாத அதிகாரத்தை அவசரமாக பிரயோகம்செய்து, ரகசியமாக பதவிப்பிரமாணமும் செய்து வைத்திருப்பது, ஆளுநர் பதவியில் அமர்ந்து மத்தியில் உள்ள பா.ஜ.க., அரசின் முழுநேர ஏஜெண்டாக மிகத்தாழ்ந்த “அரசியல் செய்கிறார்” என்ற அருவெறுக்கத்தக்க குற்றச்சாட்டை வெளிச்சம் போட்டு, உண்மையாக்கி விட்டது.

புதுச்சேரி விவகாரம் இப்படியென்றால், மேற்கு வங்க ஆளுநர் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்களை மிரட்டுகின்ற பாணியில் தொலைபேசியில் அநாகரிகமான வார்த்தைகளைப் பேசி இருப்பதையும், யாராலும் பொறுத்துக் கொள்ளவோ மன்னிக்கவோ முடியாது.

அதேபோல், டெல்லியில் மக்கள் தேர்ந்தெடுத்த முதல்வர் திரு. அரவிந்த் கெஜ்ரிவாலை செயல்பட விடாமல் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு முடக்கி, தடுப்பது ஜனநாயக நாட்டில் யாரும் ஏற்றுக் கொள்ள முடியாதது.

ராஜ்பவன்களில் இருக்கும் ஆளுநர்களின் செயல்பாடுகளும் “ஆட்டுக்கு தாடி தேவையில்லை என்பது போல் நாட்டுக்கு ஏன் கவர்னர்”, என்ற கேள்வியையும் மீண்டும் எழுப்புகிறது. ஆகவே மத்தியில் உள்ள பா.ஜ.க., அரசு மாநிலங்களில் உள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை மதிக்க வேண்டும் என்றும், அரசியல் சட்டம் வழங்கியுள்ள மாநில அரசின் அதிகாரங்களில் எதேச்சதிகாரமாக அத்துமீறல் செய்து ஆக்கிரமிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன். " என்று அதில் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி