புதுக்கோட்டையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, பேட்டி தர முடியாது என்று கூறி சன் டிவி தொலைக்காட்சியின் மைக்கை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தூக்கி வீசினார். மேலும், அவரை பற்றிய செய்தியை ஒளிபரப்ப கூடாது என்று கூறியது பத்திரிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், புதுக்கோட்டை பத்திரிகையாளர் சந்திப்பின் போது சன் டி.வி. மைக்கைத் தூக்கி வீசியிருக்கிறார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர். அவரையும் அவரது அமைச்சரவையையும் மக்கள் தூக்கி வீசும் காலம் நெருங்கி வருகிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களை மிரட்டுவதும், அவர்களது செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் அதிகார மமதையில் செயல்படுவதும் அதிமுக அமைச்சர்களுக்கு வழக்கமானதுதான் என்று குறிப்பிட்டுள்ள அவர், மக்கள் இதனைக் கைகட்டி வேடிக்கை பார்க்கிறார்கள் என்று மட்டும் நினைக்க வேண்டாம். அவர்களது எதிர்வினை தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
பித்தளை பானையுடன் பொங்கல் பரிசு: அமைச்சர் விநியோகம்!
முன்னதாக, தமிழக அரசு பொங்கல் பரிசு வழங்கிவரும் நிலையில், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது தொகுதியில் தனியாக ‘நம்ம விஜயபாஸ்கர் வீட்டு சீர்’ என பொங்கல் பரிசு வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், புதுக்கோட்டை பத்திரிகையாளர் சந்திப்பின் போது சன் டி.வி. மைக்கைத் தூக்கி வீசியிருக்கிறார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர். அவரையும் அவரது அமைச்சரவையையும் மக்கள் தூக்கி வீசும் காலம் நெருங்கி வருகிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களை மிரட்டுவதும், அவர்களது செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் அதிகார மமதையில் செயல்படுவதும் அதிமுக அமைச்சர்களுக்கு வழக்கமானதுதான் என்று குறிப்பிட்டுள்ள அவர், மக்கள் இதனைக் கைகட்டி வேடிக்கை பார்க்கிறார்கள் என்று மட்டும் நினைக்க வேண்டாம். அவர்களது எதிர்வினை தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
பித்தளை பானையுடன் பொங்கல் பரிசு: அமைச்சர் விநியோகம்!
முன்னதாக, தமிழக அரசு பொங்கல் பரிசு வழங்கிவரும் நிலையில், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது தொகுதியில் தனியாக ‘நம்ம விஜயபாஸ்கர் வீட்டு சீர்’ என பொங்கல் பரிசு வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.