ஆப்நகரம்

MK Stalin: ஊழல் குற்றவாளி ஜெயலலிதா; நினைவு மண்டபத்துக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!!

உச்சநீதிமன்றம் குற்றவாளி என அறிவித்த ஜெயலலிதாவுக்கு ஊழலில் திளைத்தவர்கள் நினைவு மண்டபம் கட்டுவதாக, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 7 May 2018, 4:55 pm
உச்சநீதிமன்றம் குற்றவாளி என அறிவித்த ஜெயலலிதாவுக்கு ஊழலில் திளைத்தவர்கள் நினைவு மண்டபம் கட்டுவதாக, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil ஊழல் குற்றவாளி ஜெயலலிதா; நினைவு மண்டபத்துக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!!
ஊழல் குற்றவாளி ஜெயலலிதா; நினைவு மண்டபத்துக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!!


திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது சட்டமன்றத் தொகுதியான கொளத்தூரில் பல்வேறு நலத்திட்டங்களை இன்று தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

அதற்கு பதிலளித்த அவர், “தமிழக மாணவர்களை அவமதிக்கும் வகையில் சோதனையிட்ட சிபிஎஸ்இ, தமிழக மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டுமென சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளோம். குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற பின், அதை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

காவிரியிலிருந்து 4 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்னும், கர்நாடக அரசு தரமுடியாது என கூறுவது புதிதான ஒன்றல்ல. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டிய மத்திய அரசும், கர்நாடக அரசும் அந்தத் தீர்ப்பைக் கண்டுக்கொள்ளாமல் இருக்கின்றன. இதைக் கண்டிக்கும் விதமாக, தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள் தொடர்ந்து போராடி வருகின்றன.

உச்ச நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பளித்த, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டுவது, ஜனநாயகத்துக்கு எதிரானது. ஊழலில் திளைத்துக்கொண்டிருப்பவர்கள் ஊழல் புரிந்தவருக்கு நினைவு மண்டபம் கட்டுகின்றனர்” என கூறியுள்ளார்.

அடுத்த செய்தி