ஆப்நகரம்

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: ஸ்டாலின் இரங்கல்!

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்

Samayam Tamil 23 Oct 2020, 4:06 pm
விருதுநகர் மாவட்டம் செங்குளம் பகுதியில் சிவகாசியை சேர்ந்த சண்முகநாதன் என்பவர்க்கு சொந்தமான ராஜேஸ்வரி என்ற பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இன்று காலை வழக்கமான பணிகள் நடைபெற்று வந்த பொழுது, திடீரென பட்டாசு தயாரிக்கும் அறையில் வெடி விபத்து ஏற்பட்டது.
Samayam Tamil ஸ்டாலின்
ஸ்டாலின்


இந்த வெடி விபத்தில் சிக்கி ஆலையில் பணிபுரிந்த ஐந்து பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து டி.கல்லுப்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இந்த நிலையில், பட்டாசு ஆலை விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “விருதுநகர் அருகே உள்ள எரிச்சநத்தம் பகுதியில் இருக்கும் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் சிக்கி மூன்று பெண்கள் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்திருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது. உயிரிழந்தோரின் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.

பட்டாசு ஆலை விபத்து...சம்பவ இடத்திலேயே ஐந்து பேர் பலி

பட்டாசுத் தொழிற்சாலைகளில் பணி புரிவோரின் பாதுகாப்பு விஷயத்தில் அதிமுக அரசு தொடர்ந்து அலட்சியமாக இருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ள ஸ்டாலின், தீபாவளிப் பண்டிகை நேரத்தில் பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பினை மிகுந்த கவனத்துடன் உறுதி செய்யுமாறு அதிமுக அரசை வலியுறுத்தியுள்ளார்.


மேலும், உயிரிழந்த குடும்பங்களுக்கு அதிகமான நிதி உதவியை அளித்திட வேண்டும் என்றும், காயம்பட்டவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டுமென்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி