முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியில், கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவதூறாக பேசியதாக எனக்கு எதிராக அரசு வழக்கறிஞர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை தொடர்ந்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி ஒரு கொடுமையான நிலையில் நடந்து கொண்டிருக்கிறது. இப்போது இருக்கக்கூடிய ஆட்சியை பொறுத்தவரைக்கும் இருக்கக்கூடிய பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். பதவி போய்விட்டால் கொள்ளையடிக்க முடியாது, பதவி போய்விட்டால் அமைச்சராக இருக்க முடியாது, ஊழல் செய்ய முடியாது. எனவே அந்தப் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க கூடிய நிலையில் தான் ஆட்சி உள்ளது.
கொலைகாரர்கள் மட்டும் அல்ல, ஊழல் செய்யக்கூடியவர்கள் மட்டுமல்ல, கோமாளித்தனமாக சில அமைச்சர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் எடப்பாடி உள்ளார். இன்றைக்கு கொலைப் பழி சுமத்தப்பட்ட நிலையில் உள்ள ஒரு முதலமைச்சர், கொடநாட்டில் 5 கொலை செய்த எடப்பாடி. எனவே விரைவில் அவர் சிறைக்கு போக கூடிய ஒரு சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. கொலைகாரன் கொள்ளைக்காரன் தலைமையில் நடக்க கூடிய ஆட்சியில் மக்களுக்கு நல்லது வாய்ப்பில்லை" என பேசியதாக என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் எவ்விதமான முகாந்திரமும் இல்லாத நிலையில், திமுக மீதான அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக உள் நோக்கத்துடன் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது என்பதை கீழமை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள தவறி விட்டது. பேச்சுரிமை, கருத்துரிமை போன்றவை இருப்பதையும் கீழமை நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை. ஆகவே என்மீதான அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக விலக்கு அளித்தும் விசாரணைக்கு தடை விதித்தும் உத்தரவிட்டதோடு, வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியில், கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவதூறாக பேசியதாக எனக்கு எதிராக அரசு வழக்கறிஞர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை தொடர்ந்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி ஒரு கொடுமையான நிலையில் நடந்து கொண்டிருக்கிறது. இப்போது இருக்கக்கூடிய ஆட்சியை பொறுத்தவரைக்கும் இருக்கக்கூடிய பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். பதவி போய்விட்டால் கொள்ளையடிக்க முடியாது, பதவி போய்விட்டால் அமைச்சராக இருக்க முடியாது, ஊழல் செய்ய முடியாது. எனவே அந்தப் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க கூடிய நிலையில் தான் ஆட்சி உள்ளது.
கொலைகாரர்கள் மட்டும் அல்ல, ஊழல் செய்யக்கூடியவர்கள் மட்டுமல்ல, கோமாளித்தனமாக சில அமைச்சர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் எடப்பாடி உள்ளார். இன்றைக்கு கொலைப் பழி சுமத்தப்பட்ட நிலையில் உள்ள ஒரு முதலமைச்சர், கொடநாட்டில் 5 கொலை செய்த எடப்பாடி. எனவே விரைவில் அவர் சிறைக்கு போக கூடிய ஒரு சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. கொலைகாரன் கொள்ளைக்காரன் தலைமையில் நடக்க கூடிய ஆட்சியில் மக்களுக்கு நல்லது வாய்ப்பில்லை" என பேசியதாக என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் எவ்விதமான முகாந்திரமும் இல்லாத நிலையில், திமுக மீதான அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக உள் நோக்கத்துடன் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது என்பதை கீழமை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள தவறி விட்டது. பேச்சுரிமை, கருத்துரிமை போன்றவை இருப்பதையும் கீழமை நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை. ஆகவே என்மீதான அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக விலக்கு அளித்தும் விசாரணைக்கு தடை விதித்தும் உத்தரவிட்டதோடு, வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.