ஆப்நகரம்

மே மாதம் ஊரடங்குக்கு வாய்ப்பில்லை: ஸ்டாலின் சொன்ன தகவல்!

மே 2ஆம் தேதிக்குப் பிறகு முழு ஊரடங்குக்கு வாய்ப்பிருக்காது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 23 Apr 2021, 2:04 pm

ஹைலைட்ஸ்:

  • மே2க்குப் பிறகு ஊரடங்குக்கு வாய்ப்பிருக்காது!
  • ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்
  • பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வலியுறுத்தல்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil tn lockdown
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்றது. சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதனிடையே தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே உள்ளது. நேற்றைய நிலவரப்படி இதுவரை இல்லாத அளவுக்கு 12 ஆயிரத்தைக் கடந்து கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் திமுகவினருக்கு இன்று கடிதம் எழுதியுள்ள அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், “முதல் அலை தாக்கத்தின்போது, நாடு முழுவதும் முழுமையான ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது, எனினும், அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள், உளவியல் சிக்கல்கள், தனிநபர் பாதிப்புகள் இவற்றிலிருந்து இன்றுவரை முழுமையாக மீள முடியவில்லை. தொழில் வாய்ப்புகளை இழந்தோர், வேலையினைப் பறிகொடுத்தோர் இப்போதும் மன உளைச்சலில் தவிக்கின்றனர்.

யார் யாருக்கு அமைச்சர் பதவி? ஜெ பாணியில் ஸ்டாலின்
அதனால், இந்த இரண்டாவது அலைத் தாக்கத்தின்போது குறிப்பிட்ட அளவிலான கட்டுப்பாடுகள் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்களும் திமுகவினரும் அவற்றுக்குக் கட்டுப்பட்டுச் செயல்பட வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

கனிமொழிக்கு அழகிரி பதவி? சிபாரிசு செய்த பிகே, ஓகே சொன்ன ஸ்டாலின்

மேலும், "மே 2ஆம் தேதிக்குப் பிறகும் முழு ஊரடங்குக்கு வாய்ப்பிருக்காது என்ற நம்பிக்கையுடன் செயல்படுவோம். அதுவரை, கொரோனா பரவல் குறையும் வகையில் உரிய பாதுகாப்பு முறைகளைக் கையாள்வோம். நமக்கு நாமே பாதுகாப்பாக இருப்போம். நம்மைப் போன்றவர்களுக்கு பக்க பலமாக நிற்போம்" என்று தொண்டர்களுக்கு வலியுறுத்தியுள்ளார் ஸ்டாலின்.

அடுத்த செய்தி