ஆப்நகரம்

மின் வெட்டுப் பிரச்சினையை தடுக்க முதல்வர் எடுத்த சூப்பர் நடவடிக்கை!

சென்னை அண்ணா சாலையில் மின் நுகர்வோருக்கான சேவை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Samayam Tamil 20 Jun 2021, 11:29 am
பத்தாண்டுகளுக்குப் பின் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள திமுக அரசு கொரோனா தடுப்பு பணிகளிலும், மாநில வளர்ச்சிப் பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. திமுக மீது இதற்கு முன்பு வைக்கப்பட்ட எந்த விமர்சனமும் இனிமேலும் வைக்கப்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளார் மு.க.ஸ்டாலின்.
Samayam Tamil mk stalin


பார்த்து பார்த்து பணிகளை மேற்கொண்டாலும் ‘நாங்க அப்பவே சொன்னோம்’ என எதிர்கட்சியினர் கேட்கும்படியாக ஒரு பிரச்சினை எழுந்துள்ளது. திமுகவின் இதற்கு முந்தைய ஆட்சியில் மின்வெட்டு பிரச்சினை பூதாகரமாக எழுந்தது. அதனாலே அடுத்த முறை ஆட்சி பறிபோனது. இதனால் திமுக ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டு வந்துவிடும் என தேர்தல் நேரத்தில் அதிமுக பிரச்சாரம் மேற்கொண்டது.
ஊரடங்கில் இத்தனை தளர்வுகளா? வெளியாகும் ‘நச்’ அறிவிப்பு!
அதை உறுதிப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் பல்வேறு நகரங்களில் மின்வெட்டுப் பிரச்சினை எழுந்துள்ளது. கடந்த ஒன்பது மாதங்களாக அதிமுக அரசு மின் பராமபரிப்பு பணிகளை மேற்கொள்ளாததே மின்வெட்டுக்கு காரணம் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். இதற்கு அதிமுக மறுப்பு தெரிவித்துள்ளது.
அமமுக டூ திமுக: ரெகுலர் சர்வீஸா? தினகரன் தரப்பில் முக்கிய விக்கெட்!
இது ஒருபுறமிருக்க பிரச்சினையை சரிசெய்து தீர்வு காண தமிழ்நாடு அரசு முனைப்பு காட்டி வருகிறது. 10 நாள்களில் மின் பராமரிப்பு பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு மின் வெட்டு இல்லாமல் பார்த்துக்கொள்ளப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.

இந்நிலையில் மக்களிடம் புகார்களைப் பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையில் சென்னையில் மின் நுகர்வோருக்கான சேவை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பிடிஆர் பதவியை உருவும் ஸ்டாலின்? என்ன நடக்கிறது மேல் மட்டத்தில்?
அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் நுகர்வோருக்கான குறை தீர்ப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது. 94987 94987 என்ற செல்போன் எண்ணில், மின் நுகர்வோர் சேவை தொடர்பாக பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் மக்கள் பிரச்சினைகளை உடனடியாக தெரிவிக்கலாம். அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அலைக்கழிப்பு தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி