ஆப்நகரம்

திமுக நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனையில் மு.க.ஸ்டாலின்

மறைந்த திமுக எம்எல்ஏக்களின் உருவப் படத்தை திறந்து வைத்த மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

Samayam Tamil 25 Jul 2020, 12:11 pm
திமுக சட்டமன்ற உறுப்பினர்களாக பணியாற்றிய கே.பி.பி சாமி, காத்தவராயன் ஆகியோர் உடல் நலக்குறைவு காரணமாக பிப்ரவரி மாதம் உயிரிழந்ததைத் தொடர்ந்து இன்று அவர்கள் உருவப்படத்தை திமுக தலைவர் திறந்து வைத்துள்ளார்.
Samayam Tamil mk stalin


கே.பி.பி. சாமி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பிப்ரவரி 27ஆம் தேது மறைந்தார். மற்றொரு சட்டமன்ற உறுப்பினரான காத்தவராயன் அதற்கு மறு நாள் உடல்நலைக் குறைவால் உயிரிழந்தார். இவர்களது மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஜுன் 10ஆம் தேதி சென்னையில் உள்ல ரேலா மருத்துவமனையில் உயிரிழந்தார். இவரது உடலுக்கும் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

39 ரூபாயில் கொரோனா தடுப்பு மருந்து: விற்பனையில் வேகம் காட்டும் நிறுவனங்கள்!

சமீபத்தில் ஜெ.அன்பழகனின் உருவப்படத்தை மு.க.ஸ்டாலின் தனது இல்லத்தில் திறந்துவைத்தார். அந்த நிகழ்வில் ஜெ.அன்பழகனின் குடும்பத்தினரும் கலந்துகொண்டனர். இந்நிலையில் இன்று கே.பி.பி சாமி, காத்தவராயன் ஆகியோரது உருவப் படங்களை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் திமுகவின் முக்கிய நிர்வாகிகளான துரைமுருகன், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் காணொலி காட்சி மூலம் கலந்துகொண்டனர். அதன்பின்னர் மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

தமிழக அரசு கொடுத்த ஷாக்: நில அளவை கட்டணம் இத்தனை மடங்கு உயர்வா?

வரும் திங்கள் கிழமை ஜூலை 27ஆம் தேதி திமுக தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி