ஆப்நகரம்

மறைந்த தமிழறிஞர் க.ப.அறவாணனுக்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி அஞ்சலி!

சென்னை: க.ப.அறவாணன் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

Samayam Tamil 23 Dec 2018, 10:03 pm
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை பேராசிரியர், சென்னை மற்றும் நெல்லை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான க.ப.அறவாணன்(77) இன்று காலமானார்.
Samayam Tamil Stalin


இவர் 1941ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ல் நெல்லை மாவட்டம் கடலங்குடியில் பிறந்தவர். சமூகவியல், மொழியியல், இலக்கணம், கல்வியியல், வரலாறு, திறனாய்வு உள்ளிட்ட துறைகளில் ஏராளமான புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.

மூன்று முறை சிறந்த நூல்களுக்கான தமிழக அரசின் விருதை வென்றுள்ளார். 1986ல் சிறந்த பேராசிரியருக்கான விருதை வாங்கினார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார்.

இந்த சூழலில் இன்று அதிகாலை சென்னை அமைந்தகரையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். க.ப.அறவாணன் மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் நேரில் சென்று க.ப.அறவாணனுக்கு அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக டுவிட்டரில் இரங்கல் தெரிவித்திருந்த மு.க.ஸ்டாலின், கல்வித்துறையில் அன்னைத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டவரும், தமிழறிஞருமான திரு க.ப.அறவாணன் அவர்கள் மறைவெய்தியது வேதனையளிக்கிறது.

திராவிட இயக்கத்தின் மீது பற்றுக் கொண்ட அவரை இழந்து வாடும் தமிழ் இலக்கிய உலக நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கல் என்று குறிப்பிட்டிருந்தார்.

அடுத்த செய்தி